பக்கம்:சிரித்த நுணா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவ லூர்வாழ்ந்தான்! காரிநோக்கித் திரண்டுவரும் புள்ளைப் போலப் பெருங்கூட்டம் தமிழ்க்கூட்டம் பாட்டிசைக்கும் பெற்றியினைக் கானப் போமோ? தமிழுக்கும், தமிழ்நாட்டு மன்னருக்குந் தடந்தோளின் தகைமை காட்டித் தமிழுக்கும், தமிழ்நாட்டுப் பெரும்புலவர் இனத்திற்கும் தாய்போல் நின்று தமிழுக்கும் புகழ்சேர்த்தான்; தமிழ்வளர்த்தான்; தமிழ்நாட்டைத் தாக்க வந்த உமிச்சிறகுக் கொசுக்கூட்டம் ஆரியரின் ஒட்டத்தை உரைக்கப் போமோ? வடக்கிருந்து விந்தவரை வாள்முனையில் வெற்றிகொண்டான் மலையன்! அந்த வடக்கிருந்து வருமெதுவும் தமிழுக்குப் பகையென்ருல் பகைந மக்காம்! அடக்கத்திற் கெல்லையுண்டே! அன்னைக்கும், அருந்தமிழ்க்கும் தொல்லை யென்ருல் கிடக்கட்டும் என்றிருக்கும் கீழ்ச்செயலோ தமிழர்செயல்? கிடையா தென்றும்! 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/17&oldid=828803" இலிருந்து மீள்விக்கப்பட்டது