பக்கம்:சிரித்த நுணா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போரினிலே கிடைத்தபொருள் தமிழ்க்களித்துப் புகழ்சேர்த்தான் வள்ளல் காரி! கூரையிலே கூடடையும் சிட்டிற்கும் தாய்ப்பேச்சு குளிர்மைப் பேச்சாம்! ஊரினிலே வாழ்கின்ருேம்; உயர்தமிழர் என்கின்ருேம்; உதவாப் பேச்சு! "யாரினிமேல் தமிழ்காக்க?" எனுங்கேள்வி எழும்பாமுன் எழுந்து வாரீர்! உன்னைப்போல் தமிழ்காக்க ஒருகாரி இந்நாட்டிற் பிறந்தாற் போதும்! பின்னிங்கே வேற்றுமொழி வருகின்ற பேச்செடுத்தால் உதைதான் வீழும்! இந்நாட்டார், தமிழ்நாட்டார். இன்றுள்ள அரசியலார் எல்லாம் மாறிப் பொன்னுட்டைப் புனல்நாட்டைத் தமிழ்நாட்டை வாழ்விக்கும் புலிப்போத் தாவார்! பாய்புனல்சூழ் தமிழ்நாட்டின் வீரத்தை, நற்பெயரைப், பண்பை விட்டே வாயில்லாப் பூச்சியானர் கொல்புலிகள்! மறத்தோளும் சூம்பற் ருேளோ? 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/18&oldid=828804" இலிருந்து மீள்விக்கப்பட்டது