பக்கம்:சிரித்த நுணா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடித்தொடுக்கி விட்டாலிங் காரடங்கப் போருர்? தொடுப்பார்; பகைவெல்வார்! செல்லவே தேவையில்லை! 23 போர்வாள் எடுத்தே புறமுதுகு காட்டாத ஊரின் இளவரசே! உறங்குநீ கண்ணுறங்கு! 24 நாளைத் திருநாடு நம்மதடா! நாம்இனிமேல் தோளேச் சதைச்சுமையாய்த் தூக்கித் திரியோமே! 25 இல்லார்கள் இல்லாத இன்பத் திருநாட்டைக், கல்லார்கள் இல்லாத கன்னித் தமிழ்நாட்டைச், 26 சாதிச் சனியும் தமிழ்ப்பகையும் இல்லாத ஆதித் தமிழ்நாட்டை அடைவோம்! நீ கண்ணுறங்கே! 27 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/34&oldid=828821" இலிருந்து மீள்விக்கப்பட்டது