பக்கம்:சிரித்த நுணா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. முறையாமோ? ஒட்டம் தடுத்துக் காட்டாற்றின் ஒண்ணிர் பாய்ச்சக் காலாக்கிக் காட்டை, மேட்டைச் செப்பனிட்டுக் களரைத் திருத்தி நெல்விளேத்தே ஊட்டும் உழவர் இங்கிலேயேல் உணவிங் குண்டோ? உயிருண்டோ? வீட்டைக் கட்டும் கொத்தரின்றேல் வெய்யில் மழைகுளிர்க் கிருப்பேது? சட்டி பானை பெருஞ்சால்கள் குயவ ரின்றேல் தருபவர்யார்? கொட்டி யளக்கப் படிமரக்கால் கொல்லரின்றேற் கொடுப்பவர்யார்? பெட்டி கட்டில் நாற்காலி தச்ச ரின்றேற் பெறுவோமோ? பட்டு பருத்தி ஆடையெலாம் நெய்வோ ரின்றேற் பார்ப்போமோ? இருளைப் போக்கும் விளக்கொளிக்கு வாணியர் இன்றேல் ஏதெண்ணெய்? தருவார் யாரே புவிமீது தட்டா ரின்றேல் அணியெல்லாம்? மருத்துவ ரின்றேல் கொடுநோயை மாற்றும் மருந்து யார்கொடுப்பார்? பொருது வெல்லப் படைக்கருவி புதுப்புது முறையிற் செய்தவர்யார்? 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/60&oldid=828850" இலிருந்து மீள்விக்கப்பட்டது