இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எஸ்.டி. சுந்தரம்
27
- இட்லி, இட்லி, இட்லி இட்லி
- இட்லி என்று பாடுவோம்
- சுற்றி நல்ல எண்ணை ஓட
- சூட்டுடனே தள்ளுவோம்.
ம.பூ : போதும், போதும், போதும்! பேபி இட்லியைப்
- பற்றி இவ்வளவு தூரம் புகழ்ந்து பாடிட்டு, நீ
- ஏன் கருகிப் போன தோசை மாதிரி ரொம்ப
- களைச்சுப் போயிருக்கே?
பேபி : ஆமாம், கொஞ்ச நாளாக அறிவுக்கு வேலை
- மூளை கொதிப்பு! மண்டைக் கொழுப்பு! மன
- நெருப்பு! எல்லாம் வெறுப்பு! எதுக்கு இந்தப்
- பிறப்பு?
ம.பூ : இந்த வருஷம் பரீட்சையில் எல்லாப் பேப்பரும்
- நல்லா எழுதியிருக்கியோ?
பூபதி : ஓ! எல்லாம் நல்லாத்தான் எழுதியிருப்பான்!
- சொல்லேண்டா பேபி; தாத்தா கேட்கிறார்.
பேபி : உம், என்னமோ எழுதியிருக்கேன், ஆனால்...
ம.பூ : இந்த ஆனால் கீனால் என்று நீட்டிப் பேசுவதே
- எனக்குப் பிடிக்காது. கச்சிதமாப் பேசணும்.
- வாலிபனைப் போல தைரியமாப் பேசணும்.
வாணி : ஆமாம் பேபி! தாத்தாவிடம் இப்படியெல்லாம்
- விளக்கெண்ணை மாதிரிப் பேசக்கூடாது.
- தெளிவாக தைரியமா, கண்டிப்பா. கணக்காப் பேசணும்.
பேபி : கரெக்ட்... சரி... தாத்தா இந்த வருஷம் பாஸ்
- பண்ண முடியாது தாத்தா.
ம.பூ : ஏன், ஏன், ஏன்?
பேபி : என் உடம்பு சரியாயில்லை. கணக்குப் பேப்பர்
- அன்று கண் வலி! சைனஸ் பேப்பர் அன்று
- ஜலதோஷம்! தமிழ் பேப்பர் அன்று தலைவலி!