வேண்டாம்' என்று தர்மாம்பாள் மிகுந்த பயத்துடன் கூறிஞள்.
ஏகாம்பரத்தின் கண்களிலே இரண்டு ரூபாய் நிழலாடியது. வறுமையின் கொடு மையிலே உழன்ற அவருக்கு அந்த இரண்டு ரூபாய் என்ன என்னவோ ஆசைகளைக் காட்டியது.
இந்தா, தர்மு! பையிலே சாமான் இருக்கு. ஒரு துகையல் அரையேன் சாப்பிடலாம்...'
மனைவிக்குப் பின்னல் நின்றபடியே ஏகாம்பரம், குறவனுக்கு ஏதோ ஜாடை காட்டினர்.
'து கை ய ல |ா ? அம்மிக் கல்லில் பொளிவே இல்லையே. மூன்ருவது வீட் டுக்குப் போகணும் அரைக்க....'
"போயேன். சே, சே வாய்க்கு வேண்டியதை என்றைக்குத்தான்்செய்து போட்டாய் நீ?...' ஏகாம்பரம் இரைய
ஆரம்பித்தார்.
'போ டா குறவா! மரத்திலே கையை வைத்தாயோ?... ' என்று சொல் விக் கொண்டே அவனை விரட்டி விட்டுக் கொல்லை. வேலியின் படலை இழுத்து
மூடிக் கொண்டு உள்ளே சென்ருள் தர்மாம்பாள்.
துவையலுக்கு வறுத்து எடுத்துக் கொண்டு அவள் மூன்ருவது ட்டு க்குக்
கிளம்பிய வுடன் ப ட் லே த் திறந்து கொண் டு குறவன் உள்ளே வந்தான்். உடல் முழுவதும் கம்பளியால் போர்த் திக்கொண்டு, கையில் தீப்பந்தத்துடன் அவன் மரத்தில் தாவி ஏறினன். சில விநாடிகளுக்கு முன்பு கூட்டை மொய்த் துக் கொண்டு அந்தக் களிப்பிலே மூழ்கி இருந்த தேனிக்கள் தீயைக் கண்டு நாற் புறமும் சிதறி ஓடின. கோபத்துடன் கிளம்பிப் பறந்து அவன் மேல் பாய்ந் தன. கம்பளியின் மேல் வந்து விழுந்தன. குறவன் பந்தத்தைக் கீழே எறிந்தான்். சட்டென்று இரண்டு கூடுகளையும் கத்தி யால் நறுக்கி எடுத்துக் கொண்டு சரக் கொன்றை மரத்தடிக்கு விரைந்து பட லைத் திறந்து கொண்டு வெளியே போய் ட்டான். ஏகாம்பரத்தின் கையில் இரண்டு ரூபாய்கள் இளித்துக் கொண் டிருந்தன. கொல்லை முழுதும் பரிதவிப் பான குரலுடன் ஈக்கள் சுற்றித் திரிந் தன. மனிதனின் அல்ப ஆசையைப் பார்த்துத்தான்் அவை அ ப் ப டி ப் பொருமி அழு திருக்க வேண்டும்.
தர்மாம்பாள் துவையலுடன் வீட்டுக் குள் வந்தாள்.
"சாப்பிட வாருங்களேன். அங்கேயே நின்று கொண் டு என்ன செய்கிறீர் கள்?' என்று கேட்டுக் கொண்டே கிணற்றடிக்கு விரைந்தாள் அவள். கண
களும் தன்னிடம்
வரின் கையில் இருக்கும் ரூபாயைப் பார்த்து விட்டு மரத்தையும் ஒருமுறை அண்ணுந்து பார்த்தாள்.
"'என்ன இது? தேன் கூட்டை அழித் தாச்சா?' ■
'போயேன். அழித்தால் என்னவாம்? திருப்பிக் கட்டுகின்றன!' என்று ஏதோ ஒரு சமாதான்ம் கூறி அவளைச் சாந்தப் படுத்தப் பார்த்தார் அவர்.
'இந்த ரூபாய் வந்துதான்் நப குடும் பத்துக்கு விடியப் போகிறதா? அப்படி என்ன ஆய ரமா ஐந்நூரு? அவன் பார்த் துக் கொடுத் தால் விடியும்...' என்று வானுற ஓங்கி நிற்கும் கச்சபேசுவரனின் கோயில் கோபுரத்தைச் சுட்டிக் காட்டி ளுள் தர்மாம்பாள்.
சாமிக்குத்தான்் தேன் அபிஷேகத்
துக்குக் கொண்டு போவதாகச் சொன்
ஞன் ' என்றார் ஏகாம்பரம் மிகவும்
புயந்த குரலில்.
' சொன்ஞன் ஆயிரம் இத்தனை
ஜீவன்கள் இங்கே பசியால் துடிக்கும் போது அங்கே அந்த இறைவன் தேனே அபிஷேகம் பண்ணிக் கொள்ளத்தான்் காத்துக் கிடக்கிருனச்கும் !'
தர்மாம்பாள் கண்ணிர் வழிய உள்ளே போய் விட்டாள். அவள் அன்றும் சாப் பிட வில்லை. மனசிலே பயம், தன் குடும்பம் கலந்து போகிற மாதிரி.
Хү.
அப்படியேதான்் ஆயிற்று. மூத்த பெண்ணுக்கு வாத்தியார் வேலையாகி வேறு ஊருக்கு மாற்றலாகிப் போளுள். மூன்று குழந்தைகளே அவள் தமையன் வந்து தம்முடன் இருக்கட்டும் என்று அழைத்துப் போனர். இரண்டு குழந்தை கள் வாலாஜாபாத் பாடசாலையில் போய்ச் சேர்ந்தனர். அக்குடும்பத்தினர் தேனி.க்கள் சிதறி ஓடியதைப் போல் சிதறிப் போய்த் திசைக்கு ஒருவராகப் போயிருந்தார்கள். மறுபடியும் தேனிக் கள் அவர்களே நம்பிக் கூடுகட்டும் போது தான்், குடும்பமும் ஒன்று சேரும் என்று நம்பிளுள் தர்மாம்பாள். அந்த இரண்டு
ரூபாயை அவள் குடும்பத்துக்காகப் பயன்படுத் தவில்லை. கோபுர வாசலில் கண் இழந்து, கால்கள் இழந்து வாடும்
ஏழைகளுக்குக் கொடுத்து விட்டாள்.
தினமும் அதிகாலையிலே எழுந்தவுடன், அவள் தோட்டத்துக்குப் போவாள். தேனிக்கள் ரீங்காரமி திகின்றனவா ? மறு படி பும் அவை வருமா ? தன் குழந்தை திரும்பி வருவார்
களா?' என்று ஏங்கிய உள்ளத்துடன் தோட்டத்தையே கூர்ந்து பார்த்த வாறு அயர்ந்து விடுவாள்.