பாதிக்கப் பட்ட மனம், இன்னுென் றைத் தாங்கும் வலிமையை அடைந் திருக்கலாம்.
அவன் மனக் கண் முன்பு அடிக்கடி ரங்கமும், திரெளபதியும் தோன்றிக் கொண்டே யிருந்தார்கள். 'பாவம், அந்தக் கிழவி எப்படி யிருக்கிருளோ" என்று நினைத்துக் கொள்வான். மகன் தன் அருகில் இருப்பது சண்முகத்தின் தாய்க்கு ஆறுதலாக இருந்தது. அந்த வருடத்துடன் படிப்பு முடிந்து விட்ட தென்றும், விரைவில் வேலை கிடைத்து விடும் என்று தாயிடம் கூறிஞன் சண் முகம்.
பெருமையும், களிப்பும் பொங்க மகனைப் பார்த்தாள். காலம் கடந்த பின் செய்த உதவி போல், வியாதி முற்றிய பின் எத்தனே வைத்தியம்
சய்து என்ன பயன்? சண்முகம் எதிர் பார்த்தபடி அவனுடைய தாய் ஒரு நாள் கண்ணே மூடிவிட்டாள். தன்னந் தனியஞக அவன் இனி அந்த ஊரில் எ த ற் கா க, யாருக்காக இருக்க வேண்டும்?
வெறிச் சோடிக் கிடந்த உலகத்தில் அவனுடைய உள்ளத்தைப் பகிர்ந்து
72
கொள்ள இ ரு வ ர் எப்பொ தது தயாராக இருக்கிருர்கள் : உள்t மனம் சொல்லிக்கொண்டே யிருந்தது.
ஒரு நாள் இரவு, வீட்டிலிருந்த ஒன் றிரண்டு உடமைகளுடன் அவன் ரயி லேறி விட்டான்.
அவனே அறியாமல் ரங்கத்தின் கிரா மத்துக்கே புறப்பட்டான்.
உலகம் அற்புதமாக இருந்தது. சாலேயில் நடந்தவன் ஊருக்குள் திரும் பினுன். எதிரே திரெளபதி, வாய்க்கா லில் குளித்து விட்டு புத்தம் புதிய ம ல ராக வந்து கொண்டிருந்தாள். ஒப்பனை யற்ற அவள் முகம் பளிங்காக இருந்தது. நெற்றியில் மஞ்சள் படிந்த அந்த முகத்தைப் பார்த்தான்். பேச வில்லை.
'நீங்களா?' என்று வாயை முதன் முதலாகத் திறந்தாள் அவள்.
"ஆமாம்..... அம்மா எப்படி யிருக் காங்க...'
திரெளபதி பதில் பேசவில்லை. 'வீட்டுக்கு வாருங்கள்' என்று மட்டும் கூறிஞள்.
சண்முகமும், திரெளபதியும் ஒன்
ருக வீட்டுக்குள் நுழைந்த போது இடியாப்பத்தின் மணம் வீசியது. கூடத்தில் முத்துவின் படத்தின் மீது மல்லிகை மாலை மலர்ந்து துவண் டிருந்தது.
'தம்பி! வாப்பா....சொல்லாமல் போயிட்டியே!' ரங்கம் வரவேற்ருள் அவனை. கிழவி ஒடுங்கிப் போய் விட் டாள்.
'உன் அம்மா எப்படி இருக்காங்க தம்பி?'
'அம்மா! இனிமேல் நீங்கதான்்..."
ரங்கம் விஷயத்தைப் புரிந்துகொண் டாள். 'தம்பி முத்து சாகவில்லை தம்பி. அவன் இறந்து விட்டான் என்று
யார் சொன்னலும் நான் ஒப்புக் கொள்ளவில்லை....அப்படித் தான்ே தம்பி!'
"ஆமாம்...அம்மா....இனி நான் தான்் உங்கள் மகன்....' என்ருன்
சண்முகம்.
திரெளபதி முதன் முதலாக சண் முகத்தை நேருக்கு நேர் பார்க்க வெட்கப் பட்டாள்.