இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புடவைக் குடை பிடித்தேன்!
சுரதா
கரும்பொடு நான் பிறந்தேன் - இளங்
காற்ருெடு நானசைந்தேன் !
அரும்பொடு நான் வளர்ந்தேன் - மலர்
ஆனபின் தேன் திறந்தேன் !
நதிமணல் மீதிருந்தேன் - அவர்
நட்டகல் மீதிருந்தார் !
புதுமழை பெய்கையிலே - நான்
புடவைக் குடைபிடித்தேன் !
என் பெயர் அன்ன மென்றேன் - பசிக்
கில்லேயோ அன்னமென்றார் ? பொன்மணி மண்டபத்தில் - புதுப்
புன்னகை அன்னமிட்டேன் !
காவிரி ஆழமென்றேன் - அவர், காதலே ஆழமென்றார் !
சேவலேன் கூவுதென்றேன் - விழிச் சேனேஏன் தாக்குதென்றார் ?
வன்பால் குறிஞ்சிநிலம் - அது
வாழ்க்கைப் புணர்ச்சிநிலம் !
மென்பால் மருதநிலம் - அதை
வெல்வதுன் மேனிநலம் !
என்றார் குளக்கரையில் - இதழ்
இட்டார் இதழ்க்கரையில் ! வென்றேன் பிணக்கினிலே - என
வென்றார் அணைக்கையிலே !