பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 i 8 மட்டும் வாயை நாற அடிக்கிறதுலேயா பிரியம் ?' என்று கேலியாகச் சிரித்துக் கொண்டே கேட்டார் சிற்சபேசன். " என்ன சார் செய்யறது ? சின்ன வயசிலேயிருந்தே எனக்கு இந்தக் கசப்பிலே ஒரு பிரியம்! இந்தப் பழத்தைச் சாப்பிட்டுப் பழகிட்டேன். இந்தப் பழத்தினுேட கசப்பிலே ஓர் அசட்டு இனிப்பும் இருக்கு சார் !’ என்ருள் நிஷகளங் கமாகச் சிரித்துக் கொண்டே. பட்டு சொன்ன வார்த்தைகளை அவள் ஒரே அர்த்தத்தை நினைத்துக் கொண்டுதான் சொல்லியிருக்க முடியும் ஆளுல் சிற்சபேசனுக்கு எத்தனையோ அர்த் தங்கள் அந்த வார்த்தைகளிலிருந்து கிடைத்தன !

  • பட்டுவுக்கென்ன? கசப்பாயிருக்கிற எதுவுமே அவ ளுக்குச் சின்ன வயசிலிருந்து பழக்கம்! பழகினல் கசப்பைப் போல் சுவை வேறே இல்லை' என்று தமக்குள் மெல்ல முனு முணுத்துக் கொண்டார் சிற்சபேசன்.