பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலம் தேடிய நல்லோர் மோதிலால் நேரு கோபு: தங்கம்! சில நாட்களுக்குமுன் செய்தித்தாளில் நம் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் சுயராஜ்ய பவனம் என்ற தம் முன்னேர் மாளிகையை மக்களுக்கு உரிமையாக்கி, நேரு நினைவு அறத் துக்குக் கொடுத்ததாகச் செய்தியும் படமும் வந்தே பார்த்தாயா? தங்கம்: ஆம் ஆம். பார்த்தேன். அந்த மாளிகை அவர்கள் முன்னுேருக்குச் சொந்தமானதாம். ஆனலும் அது யாரால் எப்போது கட்டப் பட்டது என்பது தெரியவில்லையே. கோபு: ஆமாம் எனக்கும்தான். அதோ நம் தாத்தா வருகிருர். அவருக்கு எல்லாம் தெரிந்திருக்கலாம். அவரைக் கேட்கலாம். தாத்: என்ன குழந்தைகளே என்ன எதிர்பார்த்தி ருந்து, ஏதோ பேசுவது மாதிரி தெரிகிறதே. இருவரும்: ஆமாம் தாத்தா. சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் நம் பிரதமர் இந்திராகாந்தி ஏதோ பெருமாளிகையை மக்களுக்கு அளித்த தாகக் கண்டோமே, அது பற்றித் தெரிந்து கொள்ள ஆசை தாத்தா.

  • பள்ளிப்பிள்ளைகளுக்கு-வானெலியில் 6.5.1973

24