மோதிலால் நேரு தாத் கோ:
- உண்மைதான். தெரிந்துகொள்ள வேண்டியது தான். அது அவர்கள் முன்னேருடையது. உங்களுக்குத் தெரிந்திருக்கும் நம் பிரதமரின் தங்தை ஜவஹர்லால் நேரு என்றும் பாட்டனர் மோதிலால் நேரு என்றும். ஆம். அவர்கள் குடும்பம் மூன்று தலைமுறைகளாக காட்டுக்கு உழைத்து வரும் குடும்பம் என்பது உலகறிந்த உண்மை யல்லவா. மாதா செய்தது மக்களைக் காக்கும் என்று ஒரு பமமொழி உண்டல்லவா.
ஆமாம் தாத்தா, அம்மாகூட அடிக்கடி சொல்லுவாள். - தாத்: ஆம். அந்தப் பழமொழிப்படி தாத்தாவும் அப்பாவும் செய்த அறங்களே இன்று நம் பிரதமரைக் காத்து வருகின்றன. அவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமே. - தங்கம்: ஜவஹர்லால் நேருவைப் பற்றியும் படித்தி ருக்கிருேம் தாத்தா. அவர்களுடைய அப்பா மோதிலால் நேரு பற்றி அதிகம் தெரியாகே. தாத்: இன்று நீங்கள் படித்த அந்த சுயராஜ்ய பவனம் ஆகிய ஆனந்த பவனத்தை வாங்கிக் கட்டியவர் அந்த மோத்திலால் நேரு அவர்கள் தாம். இராமாயணத்தோடு தொடர்பு கொண்ட பரத்துவாஜ ஆசிரமத்தை அடுத்திருந்த அந்த மாளிகை அவர் உள்ளத்தைக் கவர்ந்தது; வாங்கி விட்டார். வாங்கின. பிறகு அவர் செலவிட்ட தொகை பெரிது. அந்தக் காலத்தில் அவர் வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கைக்கும் வந்த பல மேட்ைடு உள்நாட்டு விருந்தினருக்கும் ஏற்ப இந்தப் பெருமாளிகை பல்வேறு வகையில் 25