மோதிலால் நேரு தாத்: நல்லது அப்படியேதான் இந்த நேருவின் முன்னேரும் பலரால் அழைக்கப் பெற்றனர். தங்: ஆமாம். அதற்கும் நேரு என்ற பெயருக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்கள் தாத்தா. தா: பொறு அவசரப்படாதே. அதைத்தானே சொல்லப்போகிறேன். உ ரு து மொ ழி யி ல் கால்வாய் என்பதற்கு நஹார் என்று பெயர். கஹார் வீட்டார் என்று வழங்கிய பெயரே, பின் நேரு வீட்டார் என வழங்கப் பெற்றது. இருவரும்: அட அதிசயமாக இருக்கின்றதே. சரி. அவர்கள் மாளிகை அலகாபாத்தில் உள்ள ஆனந்தபவனம் என்றிர்களே; பின் எப்படி அவர்கள் டில்லியிலிருந்து அங்கே சென்ருர்கள். தாத்: காஷ்மீரத்திலிருந்து வந்த ராஜகால் பேரர் பெயர் கங்காதரர். அவர் காலத்தில் பல அரசியல் குழப்பங்கள் உண்டாக, அவர் குடும்பத்துடன் 'ஆக்ரா'வுக்குக் குடியேறினர். ஆக்ராவின் சிறப்பு உங்களுக்குத் தெரியுமே; இருவரும்: ஆம் ஆம்! அங்கே தாஜ்மஹால் இருக் கிறது. தாத்: கன்கு படித்திருக்கிறீர்கள். கே ரு வி ன் முன்னேர் அங்கே தான் குடியேறினர்கள். கங்காதரர் ஆக்ராவில் வாழ்ந்தபோதுதான் அவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவருள் மூன்ருமவரே நம் வழிபாட்டுக்கும் போற்றலுக்கும் உரியவரான மோதிலால். அவர் பிறப்பதற்கு முன்னே அவர் தங்தையார் கால மாகி விட்டார். 27