பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிக்கட்டுரை (1974) குழந்தைகள் கல்வி உலகமெல்லாம் கல்வி வளர்ச்சி பற்றிய கருத்து அதிகமாக வளர்ந்து வருகிறது. கம் பாரத நாட்டிலும் அத்தகைய நிலை வளர்ந்து வருவது பாராட்டு தற் குரியது. ஆண்டுதோறும் கல்விக்கெனப் பல கோடி ரூபாய் செலவழிக்கப் பெறுகின்றது. தமிழ் காட்டிலும் கல்வி வளர்ச்சி அடைந்து வருகிறது. கல்வியின், மேனிலையில் ஒரளவு அமைதி இன்மையும் ஆழ்ந்த படிப்பும் இல்லா நிலையில் அரசியல் குழல் களும் பிறவும் அமைகின்றன என்ருலும், ஆரம்பக் கல்வி மிகவும் முன்னேற்ற நிலையில் வளர்ந்து வருவது கண்கூடு. அதிலும் இளங்குழந்தைகளின் கல்வியில் பெற்ருேர் கருத்திருத்துவது மகிழ்ச்சிக் குரியதாகும். அரசாங்க அடிப்படையில் கல்வி நெறியில் அடிக்கடி பல்வேறு மாற்றங்கள் நடைபெறுகின்றன. மொழி அடிப்படையிலும் பாடங்களின் அடிப்படை யிலும் பயிற்சி மொழி அடிப்படையிலும் அமைப்பு முறையின் பிற அடிப்படைகளிலும் எத்தனேயோ மாற்றங்கள் காட்டில் நடைபெறுவதைக் காண் கிருேம். தத்தம் குழந்தைகளை அத்தகைய மாற்றங் களுள் சிக்க வைத்துச் சோதனை செய்து பார்க்க எந்தப் பெற்ருேரும் உடன்படார். எனினும், வேறு வழியில்லை என்ற காரணத்தாலே, அந்த மாற்றத்துக் குள்ளான வெள்ளப் போக்காலேயே தள்ளப் பட்டுச் 75