பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் குழந்தைகள் கல்வியையே முதலில் கவனிக்க: வேண்டும். மாநில-மத்திய அரசாங்கங்கள் இந்த உண்மையை மறந்து, 5; வயது ஆனபின்பே பிள்ளை களைத் தங்கள் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளன. ஆயினும் பலர் தனித்த நிலையில் தெருவு தொறும் குழந்தைகள் பள்ளியைத் தோற்றுவித்து நடத்தி வருகின்றனர். ஆனல் பலவற்றின் தரம் விரும்பத்தக்கதாக இல்லை. பயிற்சி' பெருத ஆசிரியர்களை நியமித்தும் இரண்டு மூன்று: வகுப்புகளுக்கு ஒர் ஆசிரியரை இருக்க வைத்தும், சிறுசிறு அறைகளில் பல மாணவர்களே அடைத்தும் பள்ளிகளை நடத்துவதைக் காண்கிருேம் இளங் குழந்தைகளுக்குச் சுற்றுச் சூழலே அமைத்து. அவற்றின் மனநிலைக்கு ஏற்ற விளையாட்டுக்கருவிகளைக் கொடுத்து, கல்வியை அவ்விளையாட்டுக்கு இடையில் புகட்ட வேண்டியது கடமையாக இருக்க, பல பள்ளிகள் மாறுபட்ட நிலையில் உள்ளன. அரசாங்க உதவியுடன் நடைபெறும் பள்ளிகளைக் காட்டிலும் நன்ருக இருக்கும் என்ற எண்ணத்துடன் பெற்ருேர் இப்பள்ளிகளை நாடும்போது இவற்றின் தரம் உயர்ங் திருக்க வேண்டாமா? மாருக ரூ 50க்கும் ரூ. 50க்கும் தகுதியற்ற ஆசிரியர்களே நியமித்து அவர்களுக்கும் இரண்டு மூன்று வகுப்புகளை ஒரே நேரத்தில் கொடுத்துப் பயிற்றுவிக்கச் சொன்னல் அவர்களால் என்ன செய்ய முடியும்? ஆங்கில மோகத்தில் ஆழ்ங். திருக்கும் சில பெரியோர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் ஆங்கிலோ இந்தியப் பெண்களை-யாதொரு, கல்வித் தகுதியும் இல்லையாயினும் பலர் நியமிக். கின்றனர். அவர்களுடைய பேச்சு கொச்சை ஆங்கில மாக இருக்குமே ஒழிய, இலக்கண அடிப்படைப் பேச்சோ, எழுத்தோ அவர்களிடம் பயிலும் மாணவர் 77