பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



28


மானைப் புல்வெளியிலிருந்து விரட்டியடித்தே தீரவேண்டும் என உறுதி கொண்டது. பாரத்தால் ஏற்பட்ட முதுகு வலியையும் பொறுத்துக் கொண்டு ஓடியது. அந்த மனிதனும் ஈட்டியைச் சுழற்றியபடி குதிரைமேல் சவாரி செய்தான். அப்படிச் சவாரி செய்வது அவனுக்குச் சுகமாக இருந்தது.

ஈட்டியைச் சுழற்றியபடி மனிதன் வேகமாகக் குதிரைமேல் வந்தான். இதைக் கண்ட மான் பயத்தால் நடுங்கி வேகமாக எங்கோ ஓடி மறைந்துவிட்டது. புல்வெளியை விட்டே மானை விரட்டியடித்த மகிழ்ச்சி குதிரைக்கு ஏற்பட்டது. அளவு கடந்த சந்தோஷத்தால் துள்ளி ஓடியது.

இறுதியாகக் காட்டுக் குதிரை ஓரிடத்தில் நின்றது. காரியம் முடிந்த பின்னும் அந்த மனிதன் குதிரையைவிட்டு இறங்கவில்லை. குதிரை மேல் சவாரி செய்வது அவனுக்கு ஆனந்தமாக இருந்தது. நடந்து கஷ்டப்படாமல் எங்கும் விரைந்து செல்ல குதிரையை தகுந்த வாகனம் என்று எண்ணினான். எனவே, அவன் அக் குதிரையின் கடிவாளத்தையோ முதுகுமேல் உட்காருவதற்காக கட்டிய தலையணையையோ நீக்கவில்லை. மாறாகத் தன் வீட்டிற்குக் குதிரையை விரட்டியபடியே சவாரி செய்தான். தன் வீட்டின் முன்னால் இருந்த மரத்தில் குதிரையைக் கட்டிப் போட்டான்.