பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாடு இல்லாத இடங்களில் கிணற்றுப் பாச னம் மூலம் பயிரிடப்படுகிறது. நீர் வளம் குறைந்த இடங்களில் நவ தானியங்களும் கடலை போன்ற பருப்பு வகைகளும் பருத்தி, புகை யிலை போன்ற புன்செய் பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன. மேற்கு மலைத் தொடரை ஒட்டிய பகுதிகளில் அடர்ந்த காடுகள் உள் ளன. இங்கே ஒருசில இடங்களில் சந்தன மரங்கள் வளர்கின்றன. நீல கிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப்பகுதிகளில் காப்பி, தேயிலை, ஏலக்காய் போன்ற மலைப் பயிர்கள் பயிராகின்றன. தமிழ் நாட்டின் முக்கியத் தொழில் களில் சர்க்கரை ஆலைகளும், பருத்தி ஆலைகளும் குறிப்பிடத்தக்கவை களாகும். காகிதம் தயாரிக்கும் தொழி லும் மின் சாதன உற்பத்தி, இரசா யன உரம் தயாரிக்கும் தொழிலும் இங்கு விரைந்து வளர்ச்சி பெற்று வருகின்றன. தாதுப் பொருள்கள் பிற மாநிலங் களை விட தமிழ்நாட்டில் குறை வாகவே கிடைக்கின்றன. சுண் ணாம்புக்கல்,ஜிப்சம் ஓரளவு கிடைப்ப தால் ஒருசில சிமென்ட் தொழிற் சாலைகள் அமைந்துள்ளன. நெய் வேலியில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. சேலத்தில் இரும் புத் தாது வெட்டி எடுக்கப்படுகிறது. இதன் மூலம் இங்கே அலுமினியத் தொழிலும் ஒரளவு அமைந்துள்ளது. அபிரகம்,பாக்சைட்,மாக்னசைட், கிரா பைட் போன்ற தாதுப் பொருள்கள் குறைந்த அளவே கிடைக்கின்றன. நெய்வேலி பழுப்பு நிலக்கரியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படு கிறது. தமிழ் நாட்டின் காவிரிப் படு 177 தமிழ் நாட்டில் ஆவடி டாங்கித் தொழிற்சாலை, ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் பிலிம் தயாரிக்கும் தொழிற்சாலை, திருச்சியில் கொதி கலன் தயாரித்தல், துப்பாக்கித் தொழிற்சாலை,சென்னை பெரம்பூரில் உள்ள இரயில் பெட்டித் தொழிற் சாலை, மணலியில் உள்ள பெட்ரோ லிய எண்ணெய் சுத்திகரிப்பாலை போன்றவை குறிப்பிடத் தக்க அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களா கும். கல்பாக்கத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக் கப்படுகிறது. சென்னையில் கார், சைக்கிள்,உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க மற் றொரு தொழில் தோல் பதனிடுதல் ஆகும். தமிழ் நாட்டில் கைத்தறி நெசவு, தீப்பெட்டி தயாரித்தல் போன்ற குடிசைத் தொழில்கள் பெருமளவில் நடைபெறுகின்றன. தூத்துக்குடியில் கடலில் முத்து எடுக்கப்படுகிறது. தமிழக மக்களில் பெரும்பாலோர் கிராமங்களில் வாழ்கின்றனர். தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னை ஆகும். தமிழ்நாட்டில் 400-க்கு மேற் பட்ட நகரங்கள் உள்ளன. மதுரை. இராமேஸ்வரம், காஞ்சிபுரம், சிதம் பரம், கன்னியாகுமரி போன்ற இடங் கள் இந்து சமய முக்கியத்துவம் உள்ள புண்ணியத்தலங்களாகும். இங்குள்ள கோயில்கள் தமிழரின் கட்டிடக்கலைத் திறனுக்குச் சான் றாக விளங்குவன. மாமல்லபுரம் சிற்பக்கலைச் சிறப்புமிகு இடமாகும். கொடைக்கானலும் உதகமண்டல மும் ஏர்க்காடும் தமிழ்நாட்டின் சிறந்த மலைவாசத் தலங்களாகும். கையில் பெட்ரோல் இருப்பதாகக் கூ கல்கத்தா, பம்பாய் போன்றே சென் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. னைத் துறைமுகம் மிகப் பெரிய