பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 இந்நோய் ஏற்பட்டவுடன் தலை வலி உண்டாகும். தொண்டையில் வலியும் அதைத் தொடர்ந்து புண் ணும் உண்டாகும். உடல் சோர்வும் பசி இல்லாத் தன்மையும் மற்ற அறி குறிகளும் உண்டாகும். சில சமயம் தொண்டையில் வீக்கமும் ஏற்படும். இந்நோயின் விளைவாக மூச்சு விடு வது கடினமாக இருக்கும் இம் மூச்சுத் திணறலால் இதயமும், நரம்பு மண்ட லமும் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். இந்நோயின் அறிகுறிகள் தென் பட்ட உடனேயே உரிய சிகிச்சை பெறவேண்டும். தாமதமானால் உயி ருக்கே ஆபத்தாகிவிடும். இந்த நோய் வராமல் தடுக்க குழந்தைகள் பிறந்த மூன்று மாதத் துக்குள் தொண்டை அடைப்பான் தடுப்பூசி போடவேண்டும். தொல்காப்பியம்: இது பழம்பெரும் தமிழ் இலக்கண நூலாகும். நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள் மிகவும் பழமையானது இதுவே யாகும். இந்த நூலை இயற்றியவர் தொல்காப்பியர் ஆவார். இந்த நூல் எழுத்து, சொல், பொருள் எனும் மூன்று அதிகாரங்களைக் கொண்ட தாகும். இந்த இலக்கண நூல் எழுத்து, சொல் ஆகியவற்றிற்கு விரி வாக இலக்கண விதிகளை வகுத்துக் கூறுகிறது. இந்நூலில் உள்ள பொருளதிகாரத்தின் மூலம் பழந்தமிழ ரின் வாழ்க்கை முறை, கலை, பண் பாடு, பழக்க வழக்கங்களை எல்லாம் தெளிவாக அறிந்து கொள்ள முடி கிறது. இந்த இலக்கண நூலுக்கு இளம் பூரணர், பேராசிரியர் உட்பட ஆறு பேர் விளக்கவுரை எழுதியுள்ளனர். இந்நூல் சுமார் மூவாயிரம் ஆண்டு கட்கு முன்பு எழுதப்பட்டிருக்கலாம் எனக் கணித்துள்ளனர். தொலைக் காட்சி தொலைக்காட்சி: டெலிவிஷன் என அழைக்கப்படும் தொலைக் காட்சி, தொலைவில் நடைபெறும் காட்சிகளை ஒளி, ஒலியோடு நாம் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து காட்டும் காட்சிப் பெட்டியாகும். இது ஆற்றல் மிக்க செய்தித் தொடர் புச் சாதனம் ஆகும். செயற்படும் வகையில் வானொலி யும், தொலைக்காட்சியும் ஒரே முறை யிலேயே அமைந்துள்ளன.வானொலி யின் ஒலி வான் வழியே அலைகளாக அனுப்பப்படுகிறது. வானொலிப் பெட்டி மீண்டும் அந்த அலைகளை ஒலியாக மாற்றி, ஒலி பரப்புகிறது. அதேபோன்று தொலைக்காட்சியில், ஒளி அலைகள் மின் அலைகளாக வானில் அனுபப்படுகின்றன. அவ் வலைகள் மீ ண் டு ம் ஒளியாகத் தொலைக்காட்சிப் பெட்டியில் மாற்றப் பட்டு ஒளி, ஒலியாக மாற்றப்பட்டு திரையில் தெரிகிறது. ஒளி, ஒலி அ ைல க ைள வானத்திலிருந்து வாங்கிப் பெட்டிகளுக்குத் தரும் கருவி கட்கு வான் அலை வாங்கி (அன் ட்ென்னா) என்று பெயர். அதன் மூலம் காட்சிகளை ஒலியுடன் திரை யில் தெளிவாகக் கண்டுகளிக்க முடி கிறது. தொலைக்காட்சியின் மூலம் உல கின் மூலை முடுக்குகளிலெல்லாம் நடைபெறும் நிகழ்ச்சிகளை நாம் இருக்கும் இடத்திலிருந்தே கண்டு மகிழ முடிகிறது. சந்திரனில் மனிதன் நடந்ததைக் கூட நாம் கண்டு மகிழ்ந் தோம். தொலைக்காட்சிக் கருவியை 1980 ஆம் ஆண்டில் சுவோரிக்கின் எனும் அமெரிக்கர் கண்டறிந்தார். ஆரம்பத் தில் தொலைக்காட்சியை 160 கி.மீ. தூரம் வரைதான்ஒளி பரப்ப முடிந் தது. ஆனால், இன்று செயற்கைக்