பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்த மண்டலம் வானதாகும். சுமார் 1000 சிவப்பணுக் களுக்கு ஒரு வெள்ளையணு வீதம் உள்ளன. வெள்ளையணுக்களுக்குக் குறிப்பிட்ட வடிவம் ஏதும் இல்லை. அடிக்கடி தன் உருவை மாற்றிக் கொண்டே இருக்கும் இயல்புடை (U&C)6]J. நோய் தரும் கிருமிகள் இரத்தத் தில் கலந்துவிட்டால் அவற்றைத் தாக்கி அழிக்கும் செயலை வெள்ளை யணுக்களே செய்கின்றன. நோய்க் கிருமி இருக்குமிடத்தில் வெள்ளை யணுக்கள் அதிகமாகப் பெருகிவிடும். அப்போராட்டத்தில் இறக்கும் வெள் ளையணுக்களே சீழாக வெளிவரு கின்றன. பெரியவர்களின் உடலில் இருப்பதைவிட சிறுவர்களின் உட லில் அதிக அளவில் வெள்ளை யனுக்கள் உள்ளன. உடலில் காயம் ஏற்படும்போது வெளியாகும் இரத்தம் தொடர்ந்து வடிந்து விடாமல் தட்டயம்கள் எனும் & சிற்றணுக்கள் 醬 /5ζ . கின்றன. \ʻz & ராண வாயு 齒 A.( தட்டயம் களி தட்டயம்கள் லிரு ந்து ஒரு வித புதுப் பொருளை உருவாக்க, அது பிளாஸ்மாவுடன் சேர்ந்து காயத்தின் மீது உறைபோல் படிந்து மூடி தொடர்ந்து இரத்தம் கசிந்து வெளிப் படாமல் தடுக்கிறது. இரத்த அழுத்தம்: இரத்தம் உட லின் பல்வேறு பகுதிகளுக்கு இதயத் திலிருந்து குழாய்கள் மூலம் செல் கிறது. இதயத் துடிப்பிற்கு ஏற்றபடி இரத்தக் குழாய்களில் இரத்தம்விட்டு விட்டுப் பாயும். அப்போது இரத்தக் குழாயின் சுவர்களில் அழுத்தம் ஏற் படும். இது இரத்த அழுத்தம் என்று சொல்லப்படுகிறது. 88 இரத்த அழுத்தம் நரம்புத் தளர்ச்சி, பெரும் மனக்கவலை, சிறுநீரக நோய் கள் ஆகியவற்றால் உண்டாகும் எனக் கண்டறிந்துள்ளார்கள். இரத்த அழுத்தம் ஏற்படும்போது நுரையீரல் களும் சிறுநீரகங்களும் பாதிக்கப்படும். வேறு சில உள்ளுறுப்புகளும் கூட பாதிப்புக்கு ஆளாகலாம். இரத்த அழுத்தம் அதிகமாகும்போது இரத் தக் குழாய் வெடித்துவிடும். இரத்த அழுத்தம் ஏற்படும்போது இதயம் விரைவாக இயங்க நேரிடுவதால் இயக்கம் திடீரென நின்றுவிடும். இதுவே மாரடைப்பு என்று கூறப்படு கிறது. இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் களைப்பும் தளர்வும் ஏற் படும். இரத்த அழுத்தம் எந்த அளவு இருக்கிறது என்பதை அளந்து அறிய "நாடி அழுத்த மானி' என்ற கருவி யைப் பயன்படுத்தி அறியமுடியும். இரத்த மண்டலம்: இரத்த மண்ட லம் என்பது இரத்தம், இதயம், இரத்தக்குழாய் ஆகியன இணைந்த ஒன்றாகும். இரத்தத்தை உடலெங்கும் எடுத் துச் செல்லும் இரத்தக்குழாய்களை மூன்று பிரிவாகப் பிரிப்பார்கள். முதல் வகை இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் சிரைகள் (Weins). இரண்டாம் வகை இதயத்திலிருந்து இரத்தத்தை வெளியே எடுத்துச் செல்லும் தமனிகள் (Arteries). மூன் றாம் வகை உடலெங்கும் இரத்தம் பாய உதவும் தந்துகிகள்(Capillaries) ஆகும். சுத்திகரிக்கப்பட்ட தூய இரத்தம் பெருந்தமனி மூலம் வெளியேறுகிறது. இது பின்னர் சிறு தமனிகளாகப் பிரி கிறது. மேலும் மேலும் பிரிந்து சின் னஞ்சிறு குழாய்களாக உடலெங்கும் பரவுகிறது. இவைகளே தந்துகிகள்.