பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

மகன் ஆவான்; இளங்கோ அடிகள் என்ற புலவர் பெருமானுக்கு அண்ணன் ஆவன்

வட நாட்டுப் போர்

செங்குட்டுவன் ஏறத்தாழ இருபது வயதிற் பட்டம் பெற்றான்; ஐம்பது வருட காலம் அரசாண்டான். அவன் சிறந்த போர் வீரன்; தன் தாயான நற்சோணை என்பவள் இறந்தவுடன், அவளுக்கு உருவம் சமைக்கத்தக்க கல்லை இமயத்திலிருந்து எடுத்துவரச் சென்றான்; அப்பொழுது அவனது நோக்கம் அறியாத வட இந்திய அரசர்கள், அவன் தங்கள் மீது படையெடுத்து வருவதாகக் கருதித் தாக்கினர். செங்குட்டுவன், புலிக் கூட்டத்தினுட் சிங்கம் பாய்வதைப் போலப் பாய்ந்து அவர்களை வென்றான்; இமயம் சென்று கல்லைக் கொணர்ந்தான்; அதன் மீது தன் தாயின் உருவத்தைப் பொறித்தான்; அச்சிலையை நட்டு கோயில் எடுப்பித்தான்.

சோழருடன் போர்

செங்குட்டுவன் மாமனான மணக்கிள்ளி இறந்தவுடன் அவன் மகனான நெடுமுடிக்கிள்ளி பட்டம் பெற முயன்றான். அம்முயற்சியை அவன் தாயத்தார் எதிர்த்துச் சோழ நாட்டில் கலகம் விளைவித்தனர். சேரர் பெருமான் பெரும்படையுடன் ‘அங்குச் சென்று, கலகம் விளைவித்த சோழ அரசர் மரபினர் ஒன்பதின்மரை ‘நேரிவாயில்’ என்ற இடத்தில் வென்றான்; தன் மைத்துனச் சோழனைச் சோழ அரசனாக்கி மீண்டான்