பக்கம்:சிலம்புநெறி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

இந்த அச்சம் மாதவிக்கு இயல்பான வழிவழிப் பழக்கத்தாலும் வந்தது. இந்த அச்சத்தின் விளைவாகிய ஊழ் துய்ப்பாகிறது. ஒரு பெண்ணின் கற்புத்திறத்திற்கு அவளுடைய கணவனே காரணம். 'கணவனாகிய ஆடவன் முறைபிறழ்ந்தால் பெண்ணின் முறைபிறழ்வுக் குக் காவல் ஏது?’ என்று கோவலனுக்கு உணர்த்தும் நோக்கத்தோடு பாடுகிறாள். மாதவி கற்பனையும் கோவலன் கற்பனையைச் சார்ந்தே, சோழப் பேரரசைச் சுற்றி வட்ட மிடுகிறது.

கோவலன் காவிரிக்குச் சிறப்புத்தந்து அது புலவாதி ருக்கிறது என்று பாடினான். மாதவி, காவிரியின் புலவாத் தன்மைக்கும் நிறை நலத்திற்கும் சோழனின் செங் கோலே காரணம் என்று சிறப்பித்து தொடர்ச்சியாகக் கோவலனின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவள் போலவும், அவன் பிரியாத பெரு நெறியில் நிற்க வேண்டும் என்ற பொருள்படவும் பாடுகிறாள்.

  • மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை

. அதுபோர்த்துக் கருங்கயற் கண் விழித் தொல்கி நடந்தாய் வாழி காவேரி கருங்கயற் கண் விரித் தொல்கி கடந்த வெல்லாம் நின் *

. கணவன் திருந்து செங்கோல் வளையாமை யறிந்தேன் வாழி காவேரி! (கானல்வரி-25) ஒன்னித்திலத்தின் பூண் ணிந்து நலஞ்சார் பவளக்

கலையுடுத்துச் செந்நெற் பழனக் கழனிதொறும் திரையுலாவு கடற்சேர்ப்ப புன்னைப் பொதும்பர் மகரத்தின் கொடியோன் எய்த

. புதுப்புண்கள் என்னைக் காணா வகை மறைத்தால் அன்னை கானின் என் செய்கோ (கானல்வரி-37) என்பன சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/60&oldid=702723" இலிருந்து மீள்விக்கப்பட்டது