பக்கம்:சிலம்புநெறி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி - 73

நிறுத்துதலும் தான்், உண்மையில் சிறந்த ೧uirafir

岳臣。6氹》LQ。

கற்பு என்பது, ஒழுக்கத்தின் மறு பெயரே. பெண்ணின் ஒழுக்கத்தை, சிறப்பித்துச் சொல்லும் பொழுது, கற்பு என்று குறிப்பிடுவது இலக்கிய வழக்கில் வந்திருக்கிறது. .

எந்த வாழ்க்கைக்கும், அன்பே அடித்தளம். அன்பில்லாத எந்த உறவும் பயனற்றது. அதிலும் ஒருவனும் ஒருத்தியுமாகக் கூடி நெடிய நாட்கள் வாழ வேண்டுமானால், அவர்களுடைய அன்பு ஆழமானதாக, அகலமானதாக, உறுதியான தாக இருக்க வேண்டும்.

மென்மையான அன்பு, உறுதிப்பாட்டில் கல்போல விளங்கவேண்டும். கற்பு என்ற சொல்லின் பகுதி கல்” என்பதாக இருக்க வேண்டும் போலத் தெரிகிறது. இங்கு, கல்' என்பது உறுதியின் பாற்பட்டது.

கற்பு என்ற சொல் இன்று கருதுவதைப் போல குறிப்பிட்ட உடலொழுக்கத்தை மட்டும் குறிப்பிடுவ தன்று; விரிந்த பொருளுடையது.

துய அன்பு, கணவனுக்காகத் தியாகம் செய்தல், வாழ்க்கையில் அனைத்துத் துறையிலும் கணவனுக்குத் தோழமையாதல், துணை நிற்றல் ஆகிய அனைத்தும் சேர்ந்த ஒழுக்க நெறிக்கே, கற்பு என்று பெயர்.

காலப்போக்கில், பெண் அடிமைத்தனம் வந்த பிறகு பெண்ணின் உடலைச் சார்ந்ததே கற்பு, என்று சிறிய எல்லை வகுத்து விட்டனர். உ. ய ர் ந் த கற்புடையப் பெண்ணின் இலக்கணம் கணவனை வாழ்வித்து வாழ்தல் உயர்த்தி உயர்தல், உடலும் உயிரும் என வாழ்க்கையில்

சி.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/75&oldid=702738" இலிருந்து மீள்விக்கப்பட்டது