பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

125



இந்த இடத்தில், யான் (சு. ச.) சிறுவனாய்ப் பள்ளியில் படித்தபோது வகுப்பு தொடங்குவதற்கு முன் பாடிய

"வாழ்க வாழ்கவே ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்
வாழ்க வாழ்கவே"

என்னும் பாடல் நினைவுக்கு வருகிறது. எல்லாம் காலத்தின் கோலம்!

மற்றும் ஓர் அரிய மரபு சிலம்பிலிருந்து தெரியவருகிறது. ஆடல் பாடலில் வல்ல கணிகையர் குலத்து மங்கை ஒருத்தி, முறைப்படி அரசன் முன்னே தனது கலையை அரங்கேற்றம் செய்த பின்பே, அவள் யாரையாவது வரித்துக் கொள்ளவோ - கலையுலக வாழ்வில் ஈடுபடவோ உரிமை உடையவள் ஆவாள் - என்பது போன்ற ஒரு வகை மரபு இருந்ததாகத் தெரிகிறது. மாதவி அரங்கேற்றம் செய்த பின்பு, அரசன் கொடுத்த மரகத மாலையை விலைக்கு வாங்குபவர் தன்னை அடையலாம் என்று கூறி மாலையைத் தன்தோழி ஒருத்தியின் வாயிலாகக் கடைத்தெருவுக்கு அனுப்பினாள். அங்கே திரிந்து கொண்டிருந்த கோவலன் மாலையை விலைக்கு வாங்கி மாதவியை அடைந்தான் என்பது முன்னரே அறிந்த செய்தி. மானம் கப்பல் ஏறிற்று என்று சொல்வர், அந்த அளவுக்குப் போகாமல், மாதவி. கோவலன் ஆகியோர் மானம் கடைத்தெரு ஏறியுள்ளது இது ஒரு பண்பாடு அற்ற - நாகரிகம் அற்ற முறையாகும்.

மணிமேகலைக் காப்பியத்திலும் இந்த ஆடல் மரபு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. புகாரில் நடைபெற்ற இந்திர விழாவிற்கு மாதவியும் மணிமேகலையும் ஏன் வரவில்லை என ஊரில் மக்களிடையே அலர் எழுந்தது.

"மணிமே கலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர"
(2:4, 5)

என்பது மணிமேகலைப் பாடல் பகுதி. மாதவியின் தாய் சித்திராபதி, வயந்த மாலையை நோக்கி, நீ மாதவிபால்