பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

151


அருவி முல்லை அணிநகை யாட்டி
விலங்குகிமிர்ந்து ஒழுகிய கருங்கவல் நெடுங்கண்
விரைமலர் நீங்கர் அவிர்அறல் கூந்தல்
உலகு புரந்துட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்
புலவர் காவில் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி" (13:157-170)

இது பாடல் பகுதி. குடசம் முதலிய மர இனங்கள். வாலுகம் = மணல் குன்று. கவிர் இதழ் = முருக்க மலரின் இதழ். பூங்கொடி வையை - வையை ஆறு என்னும் பெண். இது புலவர்களால் புகழ்ந்து போற்றப்பட்டது. நீர் பொய்க்காமல் ஒழுகுவதாம். ஈண்டு கம்பர் கோதாவரியைத் 'தண்ணென் ஒழுக்கமும் தழுவிய' தாகக் கூறியிருப்பது ஒப்புநோக்கத்தக்கது. பாண்டியர் குலத்துக்கு உரியதாம்.

நோயும் மருந்தும்

போர் மறவர்கள் போர்க்களப் பாசறையிலே தங்கி இருந்த போது, அவர்களின் மனைவிமார்களின் கவர்ச்சியான கடைக்கண் பார்வையை மனக்கண் முன் நோக்கி நோக்கி வருந்தினார்களாம். அந்தக் கடைக்கண் எங்கே இருக்கிறது? கூந்தலாகிய முகிலுக்குள் இருக்கும் முகமாகிய திங்களிடம் உள்ள புருவமாகிய வில்லின் கீழ்க் கண்கள் உள்ளன. அந்தக் கண்கள் மன்மதனின் மலராகிய அம்புகளை வென்று செவ்வரி படர்ந்துள்ளனவாம். இப்போது போர் மறவர்கள் போர்க்களப் பாசறையினின்றும் வெற்றியுடன் வீட்டிற்கு வந்து விட்டார்கள். மறவர்களின் மனைவிமார்கள் தங்கள் கடைக்கண் பார்வையை அவர்களிடம் தூதாக அனுப்புகிறார்களாம். அதாவது, கடைக் கண்ணால் காதல் உணர்வு தோன்ற நோக்குகிறார்களாம். பிரிந்து பாசறையிலேயே இருந்த போது நினைக்கச் செய்து நோய் (மனநோய்) உண்டாக்கிய கண்கள், இப்போது அந்த நோய்க்கு மருந்தாகிக் கணவரை இன்புறுத்துகின்றனவாம். பாடல்: