பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

153


தேனிமிர் நறவின் தேறல் போல
தேர வந்த நிறையழி துயரம்நின்
அருளின் அல்லது பிறிதின் தீராது"

என்னும் பாடல் பகுதியோடு ஒத்து நோக்கற்பாலது. நறவின் தேறல் = மது. நீ என்றது தலைமகளை. தலைமகன் தலைமகளை நோக்கிச் சொல்வதாக அமைந்துள்ளது இப்பாடல்: தலைமகளது நோக்கம் பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டி விடுகின்ற கதையாயுள்ளது. அவளது பார்வையிலே உள்ள கவர்ச்சி அவனது காம நோயைத் தூண்டுகிறது; அவளது பார்வையிலே உள்ள காதல் குறிப்பு அவனுக்கு அமிழ்த மருந்தாகி ஆறுதல் அளிக்கின்றது - அவ்வளவுதான்.

குண நாற்பது நூல் பாடலின் கருத்து, மேற்காட்டிய குறள் கொடுத்த கொடையா யிருக்குமோ! கண் பார்வை நோயாகவும் மருந்தாகவும் இருப்பதாக இளங்கோ கூறி இருப்பதும், அவரது சொந்தக் கற்பனையாக இருக்குமோ?அல்லது குறள் கொடுத்த கொடையாக இருக்குமோ! சிலம்பு - கானல் வரியிலும் இதனை ஒத்த ஒரு கற்பனை உள்ளது. அதாவது:

பெண்ணின் கண்கள் செய்த நோயை அவள் முலைகளே தீர்க்க முடியும் என்பதாக ஒரு கருத்து கூறப்பட்டுள்ளது:

"நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த
உறைமலி உய்யாகோய் ஊர்சுணங்கு மென்முலையே
தீர்க்கும் போலும்" (7:8:3, 4)

என்பது பாடல் பகுதி. முலை தீர்க்கும் என்பது தழுவுதலைக் குறிக்கும்.

இவ்வாறு, இளங்கோ, உவமைகளையும் உருவகங்களையும் தம் நூலில் கையாண்டு நூலை மெருகூட்டி நயப்படுத்தி உள்ளார்.