பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

273


ஆகவே, பின்பு தெய்வமாகப் போகிறாள் என்ற குறிப்பு கவுந்தியடிகளின் வாயிலாக இளங்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும், உலகியலில், வீர வைணவர் ஒருவரோ அல்லது - வீர சைவர் ஒருவரோ, மிகவும் உயர்ந்தவர் ஒருவரைக் குறிப்பிடும்போது, ஐயோ அவரா - அவர் ஒரு தெய்வமாயிற்றே! ஐயோ அந்த அம்மாவா - அவர் ஒரு தெய்வமாயிற்றே - என்று கூறுவதுண்டு என்பதும் ஈண்டு ஒப்பிட்டு எண்ணத்தக்கது.

இறுதியில், கோவலன் இறந்த செய்தி அறிந்ததும் கவுந்தி உண்ணா நோன்பு கொண்டு உயிர் துறந்தார். இப்போது கூடச் சிலர் இவ்வாறு செய்கின்றனர். கவுந்தி துறவியாதலின் இவ்வாறு செய்தார். இக்காலத்தார்க்கு இது தேவையில்லை.