294
சுந்தர சண்முகனார்
அந்தணர்கள் உண்டு. இதற்கு ஆணித் தரமான சான்று பார்க்கலாமா?
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியலில் “உயிரும் புள்ளியும்” என்று தொடங்கும் (77-ஆம்) நூற்பாவின் இடையில் உள்ள
“உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின்
என்னும் பகுதிக்குப் பார்ப்பனராகிய நச்சினார்க்கினியர் வரைந்துள்ள உரைப்பகுதி வருமாறு:
“இனிக் கரும்பார்ப்பான், கரும் பார்ப்பனி, கரும் பார்ப்பாா், கருங் குதிரை, கருங் குதிரைகள் எனவரும் இவற்றுள் கரியனாகிய பார்ப்பான், கரியளாகிய பார்ப்பனி, கரியராகிய பார்ப்பார், கரியதாகிய குதிரை, கரியனவாகிய குதிரைகள் என ஐம்பாலினையும் உணர்த்தும் பண்புகொள் பெயர் தொக்கவாறு காண்க” - என்பது உரைப்பகுதி. இங்கே கருமை என்னும் அடைமொழி கொடுத்துக் குறிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழ்நாட்டு அந்தணராகிய பார்ப்பனர். சைவத் திருக்கோயில்களிலே குருக்கள் என்னும் பெயருடன் பூசனை புரிபவர்கள், ஆதி சைவப் பிராமணர்கள் என்று அழைக்கப்படுவர்.
தமிழ்ப் பார்ப்பனர்கள் உண்டு என்பதற்குச் சிலப்பதிகாரத்திலேயே கட்டுரை காதையில் அகச்சான்று உள்ளது:
“வண்தமிழ் மறையோர்க்கு வானுறை கொடுத்த
என்பது பாடல் பகுதி. ‘தமிழ் மறையோன்’ என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.