சிலம்போ சிலம்பு!
347
ஐம்படைத் தாலியைக் கழற்றி எறிந்தானாம்; பால் அருந்துவதை விட்டுச் சோறு உண்டு போருக்குப் புறப்பட்டுப் போய் வெற்றி பெற்றானாம்:
"கிண் கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டு...
பால்விட்டு அயினியும் இன்று அயின்றனனே...
உடன்று மேல்வந்த வம்ப மன்னரை...
கவிழ்ந்து நிலஞ் சேர அட்டதை
என்பது பாடல் பகுதி. இந்த வரலாறுகளைப் பின்னணியாகக் கொண்டு "இளைய ராயினும் பகையரசு கடிவர் தென்னர்" என்று இளங்கோ பாடியுள்ளார். திங்களுக்கு 'உடு பதி' என்னும் பெயர் உண்மையைக் கம்பராமாயணம் முதலிய நூல்களில் காணலாம். உடுபதி என்றால் விண்மீன்களின் தலைவன் என்பதாம். இந்தக் கால அறிவியல் நிலையில் பார்க்காமல் அந்தக் காலச் சூழ்நிலையில் நின்று இதை நோக்க வேண்டும். இரவில் விண்மீன்களினும் திங்கள் பெரியதாய்த் தெரிதலின் உடுபதி என்றனர். (உடு - விண் மீன்; பதி = தலைவன்). அசுவனி முதல் இரேவதி வரையிலான இருபத்தேழு விண்மீன்களையும் பெண்கள் என்பதும், அவற்றின் கணவன் திங்கள் என்பதும் புராணச் செய்தி, இந்த வகையில் நோக்கின், விண்மீன்களின் கணவன் என்று பொருள் கொள்வர். இந்த உடுபதி என்பதைத்தான் 'மீன் அரசு' என்று இளங்கோ கூறியுள்ளார்.
நெடியோன்
நாடுகளைக் கொண்டு நன் முறையில் செங்கோல் செலுத்தி, கொடுந்தொழில்களை அறவே களைந்து வெற்றியும் புகழும் நிலையாகக் கொண்டு உலகு புரக்கும் சிறப்பினை உடையவன் பாண்டியன் என அழற்படு காதையில் அறிவிக்கப்பட்டுள்ளது.