பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

377


என்பன கம்பரின் கைவரிசை. இனி, கலிங்கத்துப்பரணி - போர் பாடியது - என்னும் பகுதியில் உள்ளனவற்றைக் காண்பாம்:

சோழன் படைக்கு அஞ்சிக் கலிங்க மறவர்கள் புதர் வழியாக ஓடினர். புதரில் இருந்த முட்கள் அவர்களின் உடைகளையும் தலைமயிரையும் பிய்த்து இழுத்துக் கொண்டன. இதனால் அவர்கள், சமணத் துறவியர்போல் முடியும் உடையும் இல்லாமையால், நாங்கள் படைஞர் அல்லர் - சமணத் துறவிகள் என்று தப்பி ஓடினராம். (63)

சிலர், வில்லின் நாண் கயிற்றைப் பூணுரலாகச் செய்து பூண்டு, நாங்கள் கங்கையாடச் செல்லும் பார்ப்பனர்கள் என்று கூறித் தப்பினராம் (64).

சிலர், குருதியில் நனைந்த கொடிகளைக் காவி உடை போல் உடுத்து, முடியையும் வழித்துக் கொண்டு, நாங்கள் புத்தத் துறவியர் என்று கூறித் தப்பினராம். (65)

சிலர், யானையின் மணிகளைத் தாளமாகத் தட்டிக் கொண்டு, யாங்கள் கலிங்கர் அல்லேம் - தெலுங்குப் பாணர்கள் என்று கூறித் தப்பித்து ஓடினராம். (66)

பாடல்கள்:

“வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை ஏற்றி
     வன்துாறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி
அரைக்கலிங்கம் உரிப்புண்ட கலிங்க ரெல்லாம்
     அமணரெனப் பிழைத்தாரும் அநேகர் ஆங்கே” (63)

“வேடத்தால் குறையாது முந்நூ லாக
     வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியால் கங்கை
ஆடப்போங் தகப்பட்டேம் கரந்தோம் என்றே
     அரிதனைவிட் டுயிர்பிழைத்தார் அநேகர் ஆங்கே”

(64)