சிலம்போ சிலம்பு
385
ஆனால், அவற்றிற்கு நேராக இவற்றையோ - இவற்றிற்கு நேராக அவற்றையோ கூற முடியாது என விபுலாநந்த அடிகள் தம் யாழ் நூலில் கூறியுள்ளார். இது ஆராய்ச்சிக்கு உரியது.
கேளாமோ தோழி
அடுத்து, ஆய்ச்சியர் குரவையில் உள்ள மூன்று பாடல் பகுதிகளை விளக்கம் இன்றித் தந்து சுவைத்து மகிழச் செய்ய வேண்டுமென என் அவா உந்துகிறது. இதோ அவை:
1. ‘கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
கொன்றையங் தீங்குழல் கேளாமோ தோழீ’
2. ‘பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
ஈங்குகம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
ஆம்பலக் தீங்குழல் கேளாமோ தோழீ’
3. ‘கொல்லையஞ் சாரல் குருக்தொசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
என்பன அவை. திரும்பத் திரும்பப் பாடிச் சுவைக்க வேண்டிய பகுதிகள் இவை. இவ்வாறு பாடிக் கொண்டே ஆய்ச்சியர்கள் குரவைக் கூத்து ஆடினமை, சர்க்கரைப் பந்தலில் தேன் ம்ாரி பொழிந்தது போன்றதாகும்.
அடுத்து ஒன்று: படர்க்கைப் பரவல் என்னும் தலைப்பின் கீழ் உள்ள-
1. ‘சேவகன் சீர் கேளாத செவிஎன்ன செவியே திருமால் சீர் கேளாத செவிஎன்ன செவியே
2. ‘கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே’