பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386

சுந்தர சண்முகனார்


3. ‘பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே

நாராயணா என்னா நா என்ன நாவே’

என்பன குறிப்பிடத்தக்கன. செவி, கண், நாக்கு ஆகியவை, அன்புப் பெருக்கால், திருமாலின் பெருமையைக் கேட்க வேண்டுமாம் - கோலத்தைக் காண வேண்டுமாம் - அவரை ஏத்தவேண்டுமாம்.

திருமாலின் கோலத்தைக் காணாத கண்ணைத் தாக்குவதோடு நிறுத்தவில்லை - அவரது கோலத்தை (கண்களை) இமைத்து இமைத்துக் காணும் கண்களும் தாக்கப்பட்டுள்ளன. அதாவது, கண்களை மூடி மூடித் திறக்காமல் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம். இது ஒரு நயமான பகுதி.

ஆயர்கள் திருமாலை வழிபடும் வைணவர்களாதலின், ஆய்ச்சியர் குரவையில் இச்செய்திகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. அந்த அந்த இடங்களில் அந்த அந்த நடிகராக இளங்கோ அடிகள் நடித்துள்ள அருமை பெருமை மகிழத் தக்கது.

இலக்கிய ஒப்புமை காண்டல் என்ற முறையில் திருநாவுக்கரசர் தம் உறுப்புகட்கு விடுத்துள்ள கட்டளைகளைக் காண்பாம்.

‘தலையே நீ வணங்காய்’ (1)
‘கண்காள் காண்மின்களோ ’(2)
‘செவிகாள் கேண்மின்களோ’ (3)
‘மூக்கே நீ முரலாய்’ (4)
‘வாயே வாழ்த்து கண்டாய் (5)
நெஞ்சே நீ கினையாய் (6)
‘கைகாள் கூப்பித் தொழீர்’ (7)
‘ஆக்கையால் பயனென்’ (8)

‘கால்களால் பயனென்’ (9)