பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11


ணுதற்குரிய அதிகார சிவத்துவம் வேண்டுமென்பார் தண்ணியநீர்மை -சிவத்துவம் என்னும் பொருள் பொதுளத் தண்ணீரெனவும், அத்தண்ணீரும் அவ்வமுதம்போல் விக்கன் முதலிய சலனங்களைத் தருதலின்றி யெற்குகந்த இனிமைச் சுவையுட னிருத்தல் வேண்டுமென்பார், “தழங்கருந் தேன‍ன்ன தண்ணீ”ரெனவும், அது பெறாமையின் மிகவருந்துகின்றே னென்பார், அழுங்குகின்றேனெனவும், சிவபிரான் சேதனப் பொருள்க ளெல்லாம் தமக்கு அடிமையாகத் தாம் ஆண்டான் எனவும், அசேதனப் பொருள்களெல்லாம் உடைமையாகத் தாம் உடையானெனவுங் கூறப்படுவராதலின், இந்நான்கு சொற்களைக் கொண்டு விளக்குதற்குரிய விஷயம் முன்னிலை தன்மையாகிய இரு சொற்களினமைய உடையா யடியேனெனவும், சேதன‍னாயிருந்துஞ் சிறிதும் அன்பிலனாதலின், என்னையாளுதல் பற்றிவரும் ஆண்டானென்பதினும், அசேதனப் பொருள்களைப் பற்றிய உடையானென்பது நினக்குப் பெருமையாதலின் அதனையே விளிப்பலென்பார் உடையாயெனவும், ஆண்டானென்ப துண்மை யெனினும் என்னை நோக்கியவ்வாறு கூற‍ற்கு நாணமுடையே னாதலின் அப்பொருள் பிறரறிய வென்னையே கூறிக்கொள்வ லென்பார் அடியேனெனவும் நின்றனக்குரிமையுடைய பொருளினும், அடைக்கலப்பொருளைஅவர்‌ தம்‌ அன்பர்களுக்கு. எவ்வளவு எளியறிலையிலுள்ளாசென்பது ௮ச்செயல்களானறியலாம்‌. நம் மணிவாசகர் பொருட்டு மண் சுமந்தார். “மண்முதற் சிவமீறாகிய முப்பத்தாறு த‍த்துவங்களையுங் கடந்தவன் என்று என்னைக் கூறுவார்; யானோ என் உண்மையன்பர் பொருட்டுக்கீழ்க் கண்டபிருதிவி த‍த்துவத்தை அம்முப்பத்தாறினுமேல் நிற்கும் என் சிரமேலேற்றுங் கடப்பாடுடையேன்”என்று அவர் தாம் அடியார்க் கெளியராம் நிலை