பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163


சுற்றுகிறமாதிரி இருந்தது. பசும்பால் இங்கே என் கையிலே இருக்குங்களே?' என்று தாழ்.குரலில் கூறினுள்.

"ஓஹோ' என்று நாசூக்காகத் துள்ளலுடன், துடிப் புடன், இன்பக் கிளர்ச்சியுடன் செப்பிவிட்டு, பால்தம்ளரைப் பூவிரல்களையும் சேர்த்துப் பற்றிக் கொண்டான் சுந்தர். பாவிலே-ஆமாம், பசுவின் பாலிலே குங்குமப்பூ மணத்தது; பாதாம் பருப்பு மனத்தது. சுமதியை இன்று விழுங்கிவிட்டுத் தான் மறுவேலை என்று திட்டமிட்டவன் போன்று அத்தனை ஆசையுடன்-ஆசையின் வெறியுடன் அவளைப் பார்த்தான்; பார்த்துக் கொண்டே, இந்தா, நீ குடி!' என்று பூவிரல் களின் இனிய ஸ்பரிசத்தைச் சுகமாக அனுபவித்தவளுகக் கெஞ்சுதலுடன் கொஞ்சினன். ஊஹகும், நீங்க முதலிலே குடிக்கிறது தான் முறை' என்று உடையவள் சொன்னதன் பேரில், அவன் பாலில் ஒருவாய் குடித்தான்; சுவைத்துக் குடித்தான். பிறகு, எச்சில்பாலை தன்னுடைய இனிய அணைப்பில் கட்டுண்டு கிடந்த இன்னுயிர் மனைவி சுமதியின் வாயில் ஊற்றிவிட முனைந்தான். கைகள் பரபரத்தன. விளக்கை அனைத்துவிட வேண்டும்.

சுமதிக்கு வெட்கம் தாளவில்லை. பால் தம்ளரை அத்தானிடமிருந்து-அன்புக் கணவனிடமிருந்து வாங்கி, தன்போக்கில் அந்த எச்சில் பாலே வாயருகே கொண்டு போனுள். பாலின் வாடை அவளுக்கு ஒத்துவராதோ?-- ஏன் ஒத்து வராது?-சுந்தருக்குக் கொடுத்தது போக மிஞ்சிய பாலே அவள் எத்தனையோ முறை குடித்திருக்கிருளே!இப்பொழுது அத்தான் கட்டளைப்படி பாலைக் குடித்து வைக்காவிட்டால், அத்தான் சும்மா விடமாட்டாரென்ற துப்பு அவளுக்குத் தீரத் தெளியத் தெரிந்து விட்டதால், பாலே-மிச்சப்பாலை-எச்சில் பாலை மடக்’கென்று ஒரு வாய் குடித்தாள். மின்விசிறிக் காற்று தன் மேனியின் அங்கங் களில் நூதனமான சிலிர்ப்பை ஏற்படுத்திய புதிய அனுபவத்தை அழகாக ரசித்து அனுபவித்த வண்ணம் பாலே மறு வாய் குடிக்கத் தொடங்கியதுதான் தாமதம் அவள் குபிரென்று வாந்தி எடுத்தாள்!...