பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

465

வாழ்க்கைத் துணைவனிடமிருந்து கூட்டுமாற்றை வாங்கித் தரையைச் சுத்தம் செய்து முடித்துக் கொண்டிருக்கையில், அப்படியே தரையில் அலங்கோலமாகச் சாய்ந்து விட்டாள்

్కు of 33 ஐயையோ, சுமதி:

பேயறைபட்டவகை உருகி, உருக்குலேந்த சுந்தர் செய் வகை புரியாமல் அரைக்கணம் செயலிழந்து நின்ருன்; விழி வெள்ளத்தோடு மறுபடி அவளை-சுமதியை-அவனுடைய இரண்டாந்தாரம் சுமதியைப் பரிதாபத்தோடு பார்த்தான்; ஏக்கத்தோடு பார்வையிட்டான். விலகிக் கிடந்த மாரகச் சேலையைச் செம்மைப் படுத்தியபோது, நேற்று உதயத்தில் அம்மனைச் சாட்சி வைத்துக் கட்டிய திருமாங்கல்யம் தட்டுப் பட்டது. உடல் அங்கங்களின் ரத்தம் பூராவுமே மண்டைக் குப் பாய்ந்த மாதிரி உணர்ந்தான். சுமதி சுமதி!'-மூச்சுப் பேச்சு இல்லாமற் போகவே, தாழ்ப்பாள் போட்டதைக் கலவரத்துடன் விலக்கிக்கொண்டு .ெ வ வி யே றி னு ன் மாப்பிள்ளை சுந்தர்.

வெளியே நிலவைத் தழுவி அணைத்து சுகமாகவும் சுந்தரமாகவும் சல்லாபமாகவும் பூங்காற்று வீசிக் கொண்டு தான் இருக்கிறது.

உள்ளே மறுகியவன், பின்கட்டை அடைந்து 'சுஜா!' என்று விளித்து அவளிடம் சேதியை காதும் காதும் வைத்துச் சொல்லிவிட்டுத் தாழ்வாரத்துக்கு வந்தான் சுந்தர். வழக்கம் போலவே சிந்தனைப் போதையில் மனம் லயித் துப் பின்னிப் பிணைந்து கிடந்த குமாரின் தோளைத் தொட்டு உலுக்கி, தெருக் கோடியிலிருந்த லேடி டாக்டர் பாலா மனியைக் கையோடு அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டான்.

பூங்காற்றைப் பூப்போல் அனுபவிப்பதற்கும் ஒரு பாக்கியச் சக்கரம் சித்திக்க வேண்டும்.

சுந்தர், சித்தம் கலங்கிய நிலையிலே மீண்டும் உள்ளே பிரவேசித்தான்.

£–11