பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


மாதிரி பயங்காட்டிப் பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. போலும்!...

"மாத்திரையை விழுங்கிடு, சுசி!"

"ஊஹூம்; இப்ப நான் இந்த மாத்திரையை விழுங்கில்லை, அது என்னை இப்பவே விழுங்கிடுமுங்க, அத்தான்!"

"என்ன சொல்லுறே, சுசி!"

உயிர்க்கழுவில் ஊசலாடினான் அவன்.

"திரும்பவும் நெஞ்சை வலிக்குதுங்க; வலி ஒய்ஞ்சடியும், மாத்திரையைச் சாப்பிடலாம்," என்றாள். இடதுபுற விலாக்குடையை மூர்த்தண்யமாக அழுத்தி அழுத்தித்தேய்த்து விட்டுக் கொண்டாள் சுசீலா; மூச்சு இரைத்தது; மூக்கின் முனையிலும் தாழ்வாயிலும் வேர்வை முத்தம் பதித்திருந்தது. முகம் விகாரமாகச் சுளித்ததும் உபாதையை எதிர்கொள்ளவோ அல்லது, சமாளிக்கவோ அவள் எத்தனம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

கொண்டவளின் வலியைப்போக்கிட அவன் துடியாய்த்துடித்தான். ஆனால், சூழல் சரியில்லையே! 'சுசியின் நெஞ்சை நான் தடவிக் கொடுத்தால், அவளுக்கு ஆறுதலாக இருக்கும்!”

சந்தடி கூடுவதும் குறைவதுமாக இருந்தது.

சுசீயின் வதனத்திலே மெள்ள மெள்ளச்சலனம் தாண்டிய சாந்தி பரவத் தொடங்குகிறது.

"இனியாச்சும் மாத்திரையைச் சாப்பிடேன், சுசீ!"

"ஆமா, அக்கா!"

ஆகாயத்தில் கருமேகங்கள் படைதிரண்ட காட்சியைக் கண்டு ஏனோ கலவரம் அடைந்தாள் சுசீலா, ஆகட்டுங்க, அத்தான்! முதல் காரியமாக, சென்னைக்கு உங்க அச்சா பீசுக்கு லீவை நீடிக்கச் சொல்லி ஒரு தந்தி கொடுத்திடுங்க!” என்று பதட்டமாகத் தெரிவித்தாள்.