பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

தகர்ந்தவள், மறுபடியும் அத்தான் பக்கம் நடந்து கதம்பத்தை நீட்டினாள்.

"பொருத்தம் பலே ஜோர்தான்!” எடுப்பான குரலெடுத்துச் செப்பினாள் சுசீ.

சுமதியும் சுந்தரும் ஜோடி கலைந்து, பதட்டத்தோடு திசை திரும்பினார்கள். என்னவோ, ஒர் 'அசரீர்' மாதிரி அந்த விமர்சன ஒலி எழுந்து, அடங்கிக் கொண்ட மாதிரியே அவர்கள் எண்ணியிருப்பார்களோ?

சுசீலாவுக்கு வாயெல்லாம் பல் ஆகிவிட்டது. "பூப்பாரம் சுமந்தால்தான், நமது அருமைத் தமிழ்ச் சமுதாயத்திலே, மரபு வழி வந்த சுமங்கலிப் பெண்ணுக்குப் பூரணத்வம் கிடைக்கும்! நான் பாக்கியவதி; கொடுத்து வைத்தவள்!" காலையில் இட்டுக்கொண்ட 'அரியனாச்சி' அம்மன் குங்குமத்தைச் சரிபார்த்துக்கொண்டாள்.

"அத்தான், சீக்கிரம் கொஞ்சம் தண்ணீர் கொண்டாங்க; மாத்திரையை விழுங்கிப்பிடுறேன்!” என்றாள் சுசீலா.தண்ணிர்த் தம்ளரைக் கையில் வாங்கிக் கொண்டு, அந்த 'டேஞ்சர் சிக்னல்' மாத்திரையை வாயிலே போட்டுக் கொண்டாள்; பிறகு, தண்ணிரை 'மடக்' கென்று வாயில் ஊற்றிக் கொண்டாள்!

மறுகணம், கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில்--

சுசீலாவின் கையிலிருந்த தம்ளர் நழுவியது; கைகால்கள் உதறின; கட்டிலில் அமர்ந்திருந்தவள், மடியில் அமைதியுடன் கிடந்த தவப்புதல்வனோடு அப்படியே மல்லாந்து சாய்ந்து விட்டாள் சுசீலா!---நெஞ்சடைப்பு...

"ஐயையோ, சுசீ!" என்று அலறினான் சுந்தர்; சுந்தர் கதறினான்!

பரதவிப்புடன் குழந்தையை வாரியெடுத்த சுமதி, "அக்கா...அக்கா!” என்று ஒலம் பரப்பிக் கூவினாள்.

அம்மா ஒடோடி வந்தாள்.