பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


சுசீலா கண்களே உருட்டி உருட்டி விழித்தாள். சுமதியையும் சுந்தரையும் ஜோடி மாறாமல், ஜோடி கலைக்காமல் மாறி-- மாறி மாற்றிப் பார்த்தாள். பிறகு சித்தியின் அன்பான அரவணைப்பில் சுகம் கண்டிருந்த செல்வமகன் ராஜாவையும் பார்வையிட்டாள். சடுதியிலே, சுந்தரின் கைகளைப் பற்றி இழுத்துச் சுமதியின் பூங்கரங்களிலே ஒப்படைத்தாள்!--பொருத்தம் பலே ஜோர்தான்!-- அடுத்த இமைப்பொழுதில், சுசீலாவின் அழகான கண் இமைகள் மூடிக் கொண்டன!...

செல்லக் குழந்தை வீரிடுகிறது!...