பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79


நேர்ந்ததையும் அவள் மனம் உள்வட்டமாக நினைத்து நினைத்து அசைபோடத் தவறவில்லை. எண்ணங்களிலே மனேரஞ்சிதம் இன்னமும் மனக்கின்றதுதான்! பண்பின் வடிவமைந்த குமாரின் நினைவுமுகம் நெஞ்சிலே அழகுசுட்டி, அழகு காட்டிக் கொண்டுதான் இருக்கின்றது!-பழங் கணக்குப் பார்த்தது போதும், போதும் முகத்தைத் துடைத்துக் கொண்டே எழுந்தாள். பெருமூச்சும் எழுந்தது. அத்தான் சல்லாபமாகச் சாய்ந்து கிடந்த கோலத்தைக் கண்டவள், குழந்தையின் அயர்ந்த உறக்கத்தையும் எடை போட்டாள்-நடந்தாள்-அவள் சுமதி...!

மவி பதினென்று நாற்பத்தைந்து.

பக்கத்து வீட்டிலிருந்து ட்ரான்ஸிஸ்டர் அலறிய சத்தம் வழக்கம்போல அவளுக்கு எரிச்சல் ஊட்டியது. இங்கே கூட ஒன்று உண்டு. அத்தானிடம் கேட்க வேண்டும். துட்டு எடுத்துக்கொண்டு வெளி வாசலுக்கு வந்ததும், வெளி உலகம் புதிய காற்றை வாரி வீசிக் கொண்டிருப்பதை உணர்ந்து, அவ்வுணர்வில் ஒரு சுகம்-தியாகம் மேலோடிய சுகம் ஊடாடிய உண்மையை அனுபவித்தவளாகவே. மண்ணடி அஞ்சல் நிலையத்தைக் குறி வைத்து நடந்தாள். குமாருக்குத் தந்தி அனுப்பவேண்டும்!

மண்ணடிச் சந்தடி அலாதி.

சில்லறை நாணயங்கள் நாணயமாகவே உள்ளங்கைக் குள்ளே அடங்கி முடங்கிக் கிடக்கின்றன; புத்தம் புதிய உலகம் ஒன்றில் கால்பாவி நடக்க ஆரம்பித்திருப்பதாகவே சுமதிக்குப் பட்டது. பட்டமரம் தளிர்ந்தாற்போன்ற அதிசயம் ஆறுதலாகத் தோன்றியது. உடன்பிறந்தாளின் கடைசி ஆசைக்கு-இறுதி ஆணைக்கு ஒர் ஆதரிக வடிவம் அத்தான் மூலம் புயல் வீசாமல், எரிமலை வெடிக்காமல். பூகம்பம் ஏற்படாமல், லகுவில் கிடைக்க நேர்ந்த அதிர்ஷ்டம் கூட விதியின் விளையாட்டாகத்தான் இருக்குமோ என்றும்