பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


கொடுக்கச் சொன்னேன்; அந்தச் சங்கதியைத்தான் நீயே கொஞ்ச முந்தி, செட்டில் செஞ்சிட்டியே?-பின்னே நீயே முந்திக் கொண்டு இப்போ எதற்கு அவருக்குத் தஞ்சா ஆருக்குத் தந்தி அடிக்கவேனும் என்கிற காரணம்தான் எனக்கு விளங்காமல் இருக்குது, சுமதி!' தொடர்ந்தான் 安岛多f.

சுமதி நெற்றியைத் தடவினுள்: 'நானே விவரத்தைச் சொல்லியிருக்கணும்; உங்க சந்தேகம் அல்லது கேள்வி நியாயமானது; என் சம்பந்தப்பட்ட மிஸ்டர் குமார் விஷயத்தை நானே ஒரு முடிவுக்குக் கொண்டாந்திட்டேன்; வாஸ்தவம்தான். ஆனலும், என்ளுேட இந்த முடிவை அவர் கையிலேயும் தெரியப்படுத்திவிட வேண்டியதுதானுங்களே தரும நியாயம், அத்தான்! அதற்காகத்தான், நானே முந்திக்கினு, வலிய தந்தியைக் கொடுத்திட்டுத் திரும்பினேன்!’ என்று காரண காரியத்தை விரிவாக எடுத்துக் காட்டினுள்.

"ஊம் கொட்டினுன் சுந்தர்; பெருமூச்சையும் கொட்டினன்.

"ஆல்ரைட்! நீங்க கொஞ்ச நேரம் ஒய்வு கொள்ளுங்க, அத்தான். மனசை நிம்மதியோடே ஒருநிலைப்படுத்திக்கிட்டு உறங்க முயற்சி செஞ்சால்தான் உங்க உடம்பு ஆரோக் கியத்தோடு தேறிவர முடியுமாக்கும்'

சுமதியை உருக்கம் மேலிட ஊடுருவின்ை சுந்தர். நீ லகுவாக எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திட்டே, ஆனல், அதெல்லாம் என் வரை அத்தனை சுளுவா, என்ன? சுமதி, தஞ்சாவூரிலே உனக்கும் மிஸ்டர் குமாருக்கும் இடையிலே இருந்து வந்த காதற்பிணைப்புக்கு உன்னேட அன்புத் தெய்வம் சுசி மூலம் அனுமதியும் அங்கீகாரமும் பெறணும்னு ஆவலோடும் ஆசையோடும் நீ அன்றைக்குப் புதுக்கோட்டையிலே நினைச்சுக்கிட்டு இருந்திருப்பாய்; ஆனல், சுசீ தன்ளுேட கடைசி ஆசையாய் ஒரு புது ஆணையை