பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93


எனக்கு இத்தனை நாளாக ஒரு கடிதம் கூடப் போடாமல் இருந்திட்டார். ஆகச்சே, இந்த லெட்டரை இனி நீ விரும்பும் பட்சத்தில் கிழிச்சுக்கூட தூர வீசி எறிஞ் சிடலாம்!' என்று நிதானமாகத் தெரிவித்தாள் சுமதி.

தெய்வநாயகி விநயமானதொரு மெளனத்தோடு தலையைத் தாழ்த்தி விட்டிருந்தாள்!

வெய்யில் பளிச்சிட்டது.

தெய்வநாயகி அந்தக் கடிதத்தை அலட்சியமாக வாங்கிச் சுக்கல் நூருகக் கிழித்து வீசி விட்டாள்...

கடிதத்தின் துண்டங்கள் காற்றில் பறந்து கொண்டிருக் கின்றன!