பக்கம்:சீனத்தின் குரல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

13


இவனுக்கு முந்திய சீனம் இருளடர்ந்திருந்தது. பிந்திய சீனமும் அவ்வழியே சில நாட்கள் சென்றதாயினும், ஒரே அடியாக சாக இருந்த சீனத்திற்கு புத்துயிரளித்தவன் இப்பெருந்தகையோன் என்பதை நாம் மறந்தாலும் வரலாற்று வரிகள் அவன் பெயரின் பேரில் அழியாத வாசனையைத் தடவி இருக்கிறது.


கன்பூஷியசுக்கு முன்

சீனர்கள் ஒரே இனத்தவரா என்பதைக் கண்டுபிடிப்பது மகாக் கடினமாக இருந்தது. டார்ட்டாரிகள், மங்கோலியர்கள், ஹன்ஸ் வகுப்பார், ஆகியவர்கள் சேர்ந்து உருவெடுத்ததுதான் சீன இனம். அதன் பிறகு பர்மியர்களும், ஜப்பானியரும், திபேத்தியர்களும் சீன இனத்தில் கலந்து விட்டார்கள்.

இப்படி, பல்வேறு பகுதியினர் சேர்ந்து வாழ்ந்துங்கூட அவர்களிடம் ஒரே விதமான நாகரிகம் காணப்பட்டது. இப்படி எல்லா மக்களும் ஒரே தன்மையதான நாகரிகமடைந்திருந்தும் சீன நாட்டை ஒரேநாடு என்று சொல்லமுடியாமல் வடக்கும் தெற்குமாகப் பிரிந்திருந்தது. எனினும் நாகரிகம் மட்டிலும் ஒன்றேதான்: கன்பூஷியஸ் காலத்தில் இவ்வகை நாகரிகம் பெற்ற மக்கள், பத்தாயிரம் சிறிய நாடுகளிலடங்கியவர்களாக இருந்தார்கள்.

இவற்றில் வாழ்ந்த செல்வர்கள், Dukes, Marquise, Earls, Counts, Barons என்று ஒரு