பக்கம்:சீனத்தின் குரல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

43


ஆபரேஷன் ஒன்று செய்து நாட்டின் வயிற்றில் வெகு நாளாக வளர்ந்து வரும் மந்தமதி என்ற கட்டியை அறுத்தெடுத்து, நாட்டின் முதுகில் ஓடிக் கொண்டிருக்கும் புரையை நீக்கி, வெளி நாட்டாரால் கொடுக்கப்பட்டிருக்கும் மயக்க மருந்தான அபினியால் ஏற்பட்ட போதையை நீக்கி, அயல் உலக கலைகளைக் கொண்டுவந்து குவித்து, கல்விமுறையை அடியோடு மாற்றியமைத்தாலன்றி தன் நாடு உருப்படாது எனக் கண்டார். இதைச் செய்யத் துணிந்தால் என்னென்ன எதிர்ப்புகள் ஏற்படும், அதன் விளைவுகள், அவற்றால் தான் அடைய வேண்டிய துன்பங்கள் எல்லாவற்றையுமே ஆழ்ந்து சிந்தித்தார். "இவைகளில் ஒன்றையேனும் அதுவரை சீன மக்கள் அடைய முடியாமல் தடுத்து, அயல் நாட்டாரின் கைப்பாவையாய் . ஆடிக்கொண்டிருக்கும் மஞ்சு அரசாங்கத்தை ஒழித்துத் தீரவேண்டும், அது ஒன்றுதான் நாட்டின் முன்னேற்றத்துக்கு பெரும் தடைகல்லாக இருக்கின்றது" என்ற முடிவுக்கு வந்தார் சன்-யாட்-சன்.

“சீனம் சீனர்களுக்கே”

இதே நேரத்தில்தான். மேல்நாட்டார் கொண்டு வந்த ஆயுதங்களால் பட்ட பலமான அடியின் எதிரொலியாக, "சீனம் சீனர்களுக்கே அயல் நாட்டார் ஆதிக்கம் ஒழிக", "அபினி வியாபாரம் ஒழிக", "இலஞ்சம் ஒழிக", "மஞ்சு அரசாங்கம் ஒழிக", என்ற பேரொலி நாட்டின் எல்லா மூலை முடுக்குகளிலும் கேட்டது. உதை வாங்கி வாங்கி பழகி