பக்கம்:சீனத்தின் குரல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

சீனத்தின் குரல்


தில் சூழ்ந்திருப்பவர்களுடைய சதியோசனைகளுக்கு அடிபோய் விட்டார். மக்களை சுட்டுத் தள்ள வேண்டிய அளவுக்கு உத்திரவிட அவர் உள்ளம் கெட்டது. அவருடைய அந்த கொடிய உத்தரவில் பல மாணவர்கள் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கின்றார்கள். கொலைகளை யடக்கவேண்டிய பொறுருப்பிலிருப்பவரே கொலைகளைத் தூண்டுமளவுக்கு கொடியவராய் மாறிவிட்டார். அவரை இன்று கைது செய்து வைத்திருப்பதின் மூலம் சந்தோஷப்படுகின்றவர்கள் அதிகமாக இருப்பார்களேயன்றி துக்கப்படுகின்றவர்கள் அதிகமாக இருக்கமாட்டார்கள். ஒரு பொறுப்புள்ள இராணுவமா இப்படிச் செய்தது என்று சர்க்கார் ஆச்சரியப்படலாம். இது தவிர வேறு வழியோ, சிறந்த முறையோ காணப்படவில்லை. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. சியாங் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டால் அவரை உடனே விடுதலை செய்து அவருடைய பழைய கெளரவங்களையளிக்கத் தயாரயிருக்கிறோம். சியாங் இப்படிச் செய்தது நாட்டின் முன்னேற்றத்தைக் கருதி யென்று அவர் சொல்ல முன் வந்தால், அவரை நாங்கள் கைது செய்ததும் மக்கள் முன்னேற்றத்தைக் கருதித்தான் என்ற உண்மையை எங்களாலும் நிலைநாட்ட முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டில் எது சரி என்பதை விவாதம் ஒன்றினாலேயே தீர்மானிக்க முடியும், என்று எழுதி இந்த அறிக்கையை நான்கிங் சர்க்காருக்கு அனுப்பிவிட்டார் சாங்-சியு-லியாங் என்ற தளபதி.