பக்கம்:சீனத்தின் குரல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

79


படிச் செய்திருப்பார்கள் என்று பொது மக்கள் நினைக்கக்கூடும். ஆனால் இதையே பொதுமக்கள் உ.றுதியாக நம்புவார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனெனில், முன்பு, சியாங்கைக் கைது செய்த தளபதி நான்கிங் சர்க்காருக்கு சியாங்கை விடுதலை செய்வதென்ற முடிவில் கேட்டிருந்த உறுதிமொழிகளை சர்க்கார் நிராகரித்ததிலிருந்து, சியாங் இடத்தை மந்திரிகள் கைப்பற்ற எண்ணி விட்டனர் என்ற தவறான எண்ணம் பரவிவிடுமோ என்றும் பயந்தனர். ஆனால் செய்து தீரவேண்டிய நிலையில் மந்திரிகளின் பதவி மோகம் அவர்களை மெய்மறந்து கடமையை காற்றில் விடவேண்டிய நிலைக்குக் கொண்டுவந்து விட்டது. சியாங் இறந்து விட்டாலும், அல்லது அவரைக் கைது செய்த எதிரிகள் இறந்துவிட்டாலும், அல்லது இருகரக்காரும் சேர்ந்து அழிந்துவிட்டாலும் நான்கிங் மந்திரிகளுக்கு லாபந்தான். ஏனெனில் சியாங் மாத்திரம் இறந்து விட்டால் நான்கிங் சர்க்காரை சுலபமாகக் கைப்பற்றி விடலாம். அப்படி நடக்காமல் எதிரிகள் இறந்துவிட்டால், எதிரிகளை நாங்கள்தான் கொன்று உங்களைக் காப்பாற்றினோம் என்ற கித்தாப்பைக் காட்டி சியாங்கிடம் மேலும் சில சலுகைகளைப் பெறலாம். இதுதான் மந்திரிகள் விளையாடிய இருமுனை விளையாட்டு.

நடந்தது வேறு

இப்படி நினைத்த மந்திரிகள் எண்ணத்தில் மண் விழுந்தது. மந்திரிகள் இந்த ஏற்பாடுகள் செய்து