பக்கம்:சீனத்தின் குரல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

சீனத்தின் குரல்


சாட்சியின் மேல் ஆணை, மாசற்ற சட்டங்கள் மேல் ஆணை" என்று சீன சமுதாயம் தன் விரிந்த முகம் காட்டி. பரந்த உள்ளத்தால் பராக்குக் கூறும் பலத்தைப் பெற்றிருக்கிறது.

நன்றி

அழிவு தொடங்கிய அன்னாள் முதல் விழிப்படைந்த இன்னாள்வரை நாட்டின் இழிவைத் துடைக்கப் பல இடர்பட்டு இறந்துவிட்ட எமது மூதாதையருக்கு நன்றி, உலக உதயகால விஞ்ஞானிகளுக்கு பொது உடமை தத்துவத்தைக் கொஞ்சமும் பழுதுபடாமல் எமக்குரைக்க வந்த மாபெரிய தலைவர்களுக்கு எமது நன்றி, பாட்டாலும் கூத்தாலும், பலவற்றாலும் எமது பழமையை சாகடித்த பல பெரியோர்களுக்கு நன்றி, செல்வச் செறுக்கால் எம்மைச் செருகளத்துக் கழைத்த செல்வச் சீமான்களின் அதிகாரக் குரலை அடக்கிய அரசியல் மேதைகளுக்கு எமது நன்றி. தூக்குமேடையில் துஞ்சிய தூயநெஞ்சினரின் பரிதாபக் கல்லறைக்கு நிழல் தரும் மரங்களுக்கு எங்கள் நன்றி. பொது நலத்தை சுயநலத்திற்கு விலை கூறாமல் பொது நலத்தை பொது நலமாகவே கருதிய பொன்னுள்ளத்தாருக்கு எமது நன்றி. சீன இலக்கத்தை செம்மைப்படுத்தி என்றும் அது அழியாவண்ணம் சிகப்பு முத்திரையிட்ட சிந்தனையாளர்களுக்கு எமது நன்றி. உலக மக்கள் அனைவர்க்குமே எமது நன்றி. உன்னதத் தியாகிகளுக்கு எமது நன்றி. பாழ்பட இருந்த