பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 151

காலம், எங்கள் வாழ்க்கையின் பொற்காலம், மகிழ்ச்சியான, உற்சாகமான காலம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் திட்டமிட்டுச் செயற்படும் விதம் கற்றுக் கொடுத்து, பொறுப்புகளையும் அவரவர் வேலை கடமை களையும், தவறாது செய்யப் பழக்கினார். அதே நேரம் சிறிய தவறு செய்தாலும், கண்டிப் போடு கூறி, பாசம் அன்பு கலந்து எங்கட்கு அறவுரை கூறி, எல்லாவற்றிற்கும், எல்லாச் சூழ்நிலைக்கும் ஏற்ப எங்களை வளர்த்தார்.

எங்கள் ஐயா அவர்களின் கண் பார்வையைப் பார்த்தாலே ஒரு ஒளிவீசும் தன்மையும், தீட்சண்யமும், புலப்படும். சிறு வயதிலேயே நாங்கள் அதைப் புரிந்து கொண்டோம். பழங் காலக் குருகுல வாசம் போல நாங்கள் பயிற்றுவிக்கப் பட்டோம் நாங்கள் அனைவரும் பேரன், பேத்திகள், எங்கள் ஐயாவி னாலும் ஆயா மஞ்சுளாபாய் வை. சு. அவர்களினாலும் மிக மிக நல்ல சுறுசுறுப்பானவர்களாகவும் அறிவாளர்களாகவும் தன் தன் வேலைகளைத் தானே செய்பவர் களாகவும் வளர்க்கப்பட்டோம். அதிகாலை 5 மணிக்கெழும் பழக்கமும், பாரதியார் பாடல்கள் தினம் மூன்று தடவை வீதம் பூராவும் பாடவைத்து, தேகப் பயிற்சியிலிருந்து இரவு 9.00 மணிக்குத் துயிலப் போகும் வரை எல்லாம் திட்டப்படி நடக்கும். கணப்பொழுதும் சோர்வு வராது. அப்படி எல்லாம் மிக மிக நல்லமுறையில் எங்களை வளர்த்தனர்.உண்மையே பேச வைத்து, உண்மை, நேர்மை, நியாயத்துக்குப் போராடி வெற்றி பெறும் வழியை அன்றே எங்கட்குச் சொல், செயல் முறையில் கற்றுத் தந்தனர். முடிந்தவரை பிறர் துன்பத் தைப் போக்கும்