பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

3 பொது வாழ்வு

பொதுவாக மனித வாழ்வை இரண்டு பகுதியாகப் பகுக் கலாம். ஒன்று தனக்காகவே வாழும் வாழ்க்கை. மற்றொன்று, பிறருக் காகவும் வாழும் வாழ்க்கை.

தனக்காகவே வாழ்ந்து, அதிலே இன்பங்கண்டு திளைப்பது சுருங்கியவுள்ளம் எனப்படும். இவ்வாழ்க்கை சிறப்புடைய தென்று சான்றோராற் பாராட்டப் படுவதில்லை. ஐயறிவுடைய உயிரினங் களும் இவ்வாறுதானே வாழ்கின்றன?

பிறருக்காகவும் வாழ்ந்து, அத்தொண்டிலே இன்பங் கண்டு, அகம் மகிழ்வது விரிந்தவுள்ளம் எனப்படும். இவ் வாழ்க்கைதான் சிறப்புடைத்தென்று புலமை சான்ற பெரு மக்களாற் புகழ்ந்து பேசப்படுகிறது. மனிதன் ஆறறிவு படைத்தவன் என்பது எவ்வாறு புலப்படுகிறது? பிறருக்காகவும் வாழும் வாழ்க்கையாலன்றோ?

இவ்வகையால் நோக்கும் பொழுது வயி. சு. சண்முகனாரின் வாழ்க்கை, தமக்கென வாழாது, பிறர்க்குரியாளராகவும் வாழ்ந்த வாழ்க்கையாகவே விளங்கக் காண்கிறோம்.