பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சீர்திருத்தச் செம்மல் பாவேந்தரிடம் இடையறாப் பற்றுடைய நாமக்கல் மு. செல்லப்ப ரெட்டியாரிடம் உசாவிப் பார்ப்போம். இத்திருமணங்குறித்து என்ன கூறுகிறார் எ ன் ப ைத அறிந்து கொள்வதும் நல்லதுதானே? 'நான் சென்ற முறை கானாடுகாத்தான் சென்றிருந்த போது, பாவேந்தரின் மூத்த மகளான சரசுவதியின் திருமணம் பற்றிப் பேச்சு நடந்தது. திரு. வை. சு. சண்முகம் செட்டியாரும் அவர் மனைவி மஞ்சுளாபாய் அம்மையாரும் சரசுவதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் தீவிரமாக இருந்தனர். வேலூர் கண்டர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்து கொண்டிருந்த புலவர். கண்ணப்பன் அவர்களே அந்த வரன். திருப்பூர் திராவிடர் கழகத் தோழரும் புரவலரு மான திரு. எஸ். ஆர். சுப்பிரமணியம் வீட்டில் புலவர். கண்ணப்பனும் மஞ்சுளாபாயும் எதிர்பாராமல் சந்தித்துப் பேசியபோது இந்தத் திருமணப் பேச்சுத் துவங்கியது. பிறகு வை. சு. சண்முகம் தம்பதியர் இத்திருமண முயற்சி யில் முன் னின்று எல்லா ஏற்பாடுகளும் செய்தனர். இவ்வாறு செல்லப்ப ரெட்டியார், அரும்புகள், மொட்டுகள், மலர்கள்' என்ற நூலிற் குறிப்பிடுகின்றார். இறுதியாக, சரசுவதி, கண்ணப்பர் திருமண அழைப்பிதழை நோக்கினால் பாவேந்தர் குடும்பத்துக்கும் வயி. சு. சண்முகனாரின் குடும்பத்துக்கும் எவ்வளவு நெருங்கிய உறவு இருந்தது என்பது புலனாகும். இதோ அழைப்பிதழ்: