பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சீர்திருத்தச் செம்மல் தோழர் சீவானந்தம் தொடர்பு பொதுவுடைமைக் கட்சியின் குறிப்பிடத்தக்க தலைவ ராக விளங்கிய தோழர். ப. சீவானந்தம் மேடை தோறும் அரியேறென முழங்கிவிட்டு, ஓய்வு எடுத்துக் கொள்ள அடிக்கடி இன்பமாளிகைக்கு வருவதுண்டு. அவர் வரும்பொழுது, அயலவர் போலவோ விருந்தினர் போலவோ வரவேற்கப்படுவதில்லை. அவ் வீட்டிற்கு உரியவர் போலவே வரவேற்கப்படுவார். அவர் இன்பமாளிகையில் தங்கியிருக்கும் பொழுது வேண்டிய அனைத்தும் செய்து தரப்படும். அவர் ஆடம்பர வாழ்வு வாழ்பவரல்லர். எனினும் நாட்டிற் காகத் தம்மையே ஈடுபடுத்திக் கொண்ட தலைவராயிற்றே, அவரை நன்கு பேணிக்காக்க வேண்டி, அவரைக் கண் ணுங்கருத்துமாகக் கவனித்து வருவார் சண்முகனார். இங்கே சீவா தங்கியிருக்கும் பொழுது கட்டாயம் எண்ணெய் தேய்த்துக் குளித்தாக வேண்டும். இல்லை யென்றால் சண்முகனார் விடமாட்டர். வற்புறுத்தி எண்ணெய் நீராடும்படி செய்து விடுவார். உணவு வகைகளும் ஏற்ற வகையில் ஒவ்வொன்றாகத் தேர்ந்: தெடுத்துச் சமைக்கச் சொல்லுவார். சீவாவுக்கு அறிவுரைகளும் கூறுவார். நீங்கள் நெடுநாள் உயிர் வாழ வேண்டும்; தொடர்ந்து தொண்டாற்ற வேண்டும். அதனால் உரத் துப் பேசு வதைச் சற்றே குறைத்துக் கொள்ளுங்கள் என்று அன்பும் கண்டிப்பும் கலந்த குரலில் கூறுவார். கிடைத்தற்கரிய உயரிய நூல்கள் சண்முகனாரிடம் இருக்கும். சீவா வரும்பொழுதெல்லாம் தமக்கு