பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வை. சு. சண்முகனார் வேண்டிய நூல்களை எடுத்துச் செல்வார். ஒரு தடையும் இராது. அந்த அளவிற்கு உறவு வளர்ந்திருந்தது. அண்ணல் சுப்பிரமணியனார் புதுக்கோட்டையில் அண்ணல் சுப்பிரமணியனார் என்னும் பெருமகனார் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திருக்குறள் கழகத்தலைவர். குறள் நெறி வாழும் கொள்கையர். அடக்கம் முதலிய பண்புநிறை சான்றோர். கல்வித் தொண்டே கடவுள் தொண்டென ஆற்றி வரும் தொண்டர். 1959 ஆம் ஆண்டு அவருக்கு ഥങ്ങിഴ് வந்தது. நாங்கள் சிலர் கூடி விழாக் கொண்டாமுனைந்தோம். ஆர்ட் பாட்டங்களையோ ஆர வாரங்களையோ விளம்பரங்களையோ விரும்பாத இயல்பினராதலின் மறுத்து விட்டார். அப்பொழுது தற்செயலாகச் சண்முகனார் புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். எங்கள் பேச் சில் கலந்து கொண்டார். அண்ணலார் மறுத்துரைப் பதையும் அறிந்து கொண்டார். 'நீங்கள் விழா நடத்துங்கள்! வேண்டிய ஏற்பாடு களைச் செய்யுங்கள்! நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லிவிட்டு நேரே அண்ணலாரிடம் சென்றார். எ ன் ன நீங்கள் மணிவிழாக் கொண்டாடக் கூடாதென்று சொன் னிர்களாமே? பிள்ளைகள் ஆசைப் படுகிறார்கள். நீங்கள் தடை சொல்லக் கூடாது' என்று சண்முகனார் கூறினார். 'அதெல்லாம் பெரியவர்களுக்காகச் செய்ய வேண்டியது. நான் சிறியவன்; எனக்கெதற்கு?' என்று அடக்கமாக மறுமொழி தந்தார் அண்ணலார் .