பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சீர்திருத்தச் செம்மல் அந்தச் சண்முகனார் கூறிய அறிவுரையை இந்தச் சண்முகம் எனது நாடக வாழ்க்கை' என்ற நூலில் விவரிக்கிறார். பாருங்கள்: 'காரைக்குடியில் இருந்த போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கானாடுகாத்தான் வந்திருப்பதாகச் செய்தி கிடைத்தது. கவிஞரை நேரில் காணவும் பில் கணன்' சம்பந்தமான அனுமதியைப் பெறவும் எண்ணிக் கானாடு காத்தான் சென்றேன். எங்கள் நண்பர் திரு. வை. சு. சண்முகஞ் செட்டியார் இல்லத்தில் இருப்பதாக அறிந்து, அங்கு சென்றேன். செட்டியார் அவர்களைப் பார்த்தேன். செய்திகளை விவரமாகச் சொன்னேன். வை. சு. ச. அவர்கள் மகாகவி பாரதியாரோடு நெருங்கிப் பழகியவர். கவிஞர்களோடு எச்சரிக் கையாகப் பழக வேண்டும் என்று எனக்குச் சில அறிவுரைகளையும் கூறினார். பாரதிதாசன் பத்து நிமிடங்களுக்கு முன்புதான் பள்ளத்து ர் .ே ப ா யி ரு ப் ப த க ச் சொன்னார். பாரதியாரைப் பற்றி ஒரு விசித்திரமான செய்தியையும் அறிவித்தார். ஒருநாள் செட்டியார் இல்லத்திற்குப் பாரதியார் வந்திருந்து தங்கியிருந்த போது, திடீரென்று 'எனக்கு அவசரமாக ஒரு நூறு ரூபாய் வேண்டும்; கொடுப்பீரா?' என்றாராம் பாரதி. உடனே வை. சு. ச. இதோ கொடுக் கிறேன் என்று பெட்டியைத் திறந்து ஒரு நூறு ரூபாய் எடுத்து வந்து பாரதியிடம் கொடுத்தார். பாரதி நோட்டை இருபுறமும் திருப்பிப் பார்த்து விட்டு, 'இது எனக்குத் தானே? என்றார். 'ஏன் சந்தேகம்?' என்றார் வை. சு. ச.